Followers

Wednesday, August 27, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு நண்பர் பேசும்பொழுது நான் தினமும் கொஞ்சம் குடிக்கிறேன் இதனால் எனக்கு பிரச்சினை ஏதும் வருமா என்று கேட்டார்.

நான் முடிந்தவரை எல்லாம் செய்யுங்கள் என்று தான் சொல்லுவேன். உங்களின் உடலுக்கு தீங்கு விளைவிக்காத வரை பிரச்சினை இல்லை. தீங்கு விளைவித்தால் பிரச்சினை ஆகிவிடும். நான் மது அருந்த விரும்புவதில்லை. ஏன் என்றால் அதனை அருந்தினால் எனது நரம்பு மண்டலம் பாதிக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும்.

நரம்பு பாதித்தால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கும் தெரியும். நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். அதனை நன்றாக அனுபவிக்கவேண்டும் நன்றாக அனுபவிக்கவேண்டும் என்றால் நமது உடல் நன்றாக இருக்கவேண்டும் இல்லையா அதனால் குடியை குறைத்துக்கொள்வது நல்லது.

குடியை நிறுத்தினால் கூட மிகவும் நல்லது. நான் உங்களிடம் சொல்லும் விசயம் அனைத்தும் உங்களின் உடலை நல்ல முறையில் இருக்கவேண்டும் அதிக நாள் வாழ வைக்கவேண்டும் என்பதற்க்காக சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

உடலை மிக தூய்மையாக வைத்துக்கொள்ளவேண்டும் அதே நேரத்தில் மிகவும் சொகுசாக வைத்துக்கொள்ளவேண்டும். சொகுசு என்றால் குளிர்சாதன அறையில் இருப்பது அல்ல. உடலை கஷ்டப்படுத்தகூடாது அதற்கு தேவையான நல்ல உணவை கொடுக்கவேண்டும். ஒரு ராஜா இருப்பது போல் தன் உடலை சொகுசாக வைக்கவேண்டும்.

மதுவை குடிக்காமல் இருந்தால் நல்லது. உடலுக்கு தீங்கு என்று சொல்லும் விசயங்களை அனைத்தையும் நீங்கள் வைவிட்டால் உங்களின் வாழ்க்கை மிகவும் ஆனந்தமான வாழ்க்கையாக அமையும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன் 
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Udalai varuthi velai senjal than 4kasu parkka mudikiradhu ithil raja pola irukka sollureenga'?