Followers

Wednesday, April 9, 2014

ஆன்மீக அனுபவங்கள் 159


வணக்கம் நண்பர்களே!
                    இரண்டு வருடத்திற்க்கு முன்பு நடைபெற்ற சம்பவம் இது. இதனை உங்களோடு பகிர்ந்துக்கொள்வதால் நீங்களும் பயன்பெறமுடியும் என்பதால் சொல்லுகிறேன். எனது நண்பர் ஒருவர் என்னை தொடர்புக்கொண்டு நான் வறுமையில் இருக்கிறேன். எனக்கு ஆன்மீக ஆலோசனை வழங்கி என்னை  உயர்த்தி விடு என்று சொன்னார். 

அப்பொழுது அவன் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தான். கடுமையான பித்ரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறான் என்பதை அவனின் ஜாதகத்தை பார்த்தவுடன் எனக்கு தெரிந்தது. அவன் குடும்பத்தோடு இருப்பதால் அவனுக்கு ஒரு அறிவுரை சொன்னேன். அதனை விடாமல் நீ செய்து வா கண்டிப்பாக நீ முன்னேற்றம் அடைந்துவிடலாம் என்றேன். நான் சொன்ன அறிவுரையை அவன் நன்றாக கடைபிடித்து வந்து இன்று மிக நல்ல நிலைமையில் இருக்கிறான்.

நான் இப்பொழுது தொழில் செய்பவர்களுக்கும் ஒரு சில ஆன்மீக அறிவுரைகளை தான் கொடுப்பேன். அதனை அவர்கள் செய்து வந்தாலே நல்ல முன்னேற்றம் எல்லாம் பெறலாம். மந்திரம் பூஜை செய்வது எல்லாம் அப்புறம் இருந்தாலும் முதலில் ஒரு சில ஆன்மீக விசயங்களை சொல்லிக்கொடுக்கிறேன். அதனை அவர்கள் செய்யும்பொழுது அவர்களை தேடி வாய்ப்புக்கள் வருகின்றன. நான் ஒரே நாளில் உன்னை தூக்கி நிறுத்துகிறேன் என்று எல்லாம் கதை விடுவது கிடையாது.

படிப்படியான நிரந்தரமான ஒரு வளர்ச்சிக்கு வழி செய்துவிடுவேன். அனைத்தும் தெய்வ காரியங்களாக இருப்பதால் வளர்ச்சி இப்படி தான் வரும். அது வரை பொறுமையாக இருப்பவர்கள் வெற்றி பெற்றுவிடுவார்கள். அவசரப்படுபவர்கள் வேறு இடத்திற்க்கு செல்லவேண்டியது தான். சொல்ல வந்த விசயத்தை சொல்லுகிறேன்.

அவனின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவனிடம் ஊரில் எங்கு இறப்பு அதாவது உனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் குடும்பத்தில் இறப்பு நடந்தால் அங்கு சென்று அவர்களுக்கு வேண்டிய உடல் உழைப்பை கொடுத்துவிடு. அன்றைய நாள் முழுவதும் பட்டினியாக விரதம் இரு. அந்த ஆத்மா நன்றாக சாந்தி அடையட்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டு வேலையை செய் என்று சொன்னேன். அவனும் செய்தான் இன்று நல்ல நிலைமையை அடைந்துவிட்டான்.

ஒரு மனிதனின் நல்ல விசயங்களுக்கு நாம் செல்லாமல் இருக்கலாம் ஆனால் அவன் குடும்பத்தில் ஒரு இறப்பு நடந்தால் கண்டிப்பாக நாம் செல்லவேண்டும். துக்கத்தில் நாம் பங்கு பெற்றுக்கொள்ளவேண்டும். இறந்த ஆத்மாவின் ஆசி நமக்கு மிகப்பெரிய புண்ணியத்தை தேடி தருகிறது. நமது வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

இந்த காலத்தில் பெற்றோர்களின் இறப்புக்கு கூட மகன்கள் வருவது கிடையாது. அப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். உலகம் கலியுகம் அல்லவா.

பித்ருதோஷம் உள்ளவர்கள் மட்டும் தான் இதனை செய்யவேண்டும் என்பது கிடையாது. மனிதனாக பிறந்த அனைவரும் செய்யவேண்டும். கொஞ்ச நாட்கள் இதனை நீங்கள் பின்பற்றி வந்தால் உங்களின் வளர்ச்சியை யாராலும் தடைச்செய்யமுடியாது.

நிறைய ஆன்மீக விசயங்களை நான் பதிவில் எழுதலாம் ஆனால் நீங்கள் கடைபிடித்து வந்தால் மட்டுமே உங்களுக்கு வளர்ச்சி கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

antonyarun said...

Dear
if is it true why .. (vettians) those who burn the bodies
not wealth in their life?
I believe you understand this question
Thank you
Anthony

nallur parames said...

Sir ippo enakku mana amaithi thevai enakku oru vali sollunga.