Followers

Wednesday, April 2, 2014

தோல் வியாதிக்கு பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                    இன்று காலையில் ஒருவருக்கு சோதிடம் பார்த்தேன். அவருக்கு ஜாதகத்தில் பனிரெண்டாவது வீட்டில் புதன் அமர்ந்து இருக்கிறது. மீனத்தில் புதன் இருக்கிறது. புதன் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அவருக்கு பத்தாவது வீட்டில் ராகு இருக்கிறார்.

புதன் தசா நடைபெறுவதால் அவர் ஆசிரியராக பணியாற்றிவருகிறார். தனியாக சிறப்பு வகுப்புகளும் எடுத்து வருகிறார். தொழில் வீட்டை காட்டும் இடத்தில் ராகு இருந்தும் இவர் ஆசிரியர் பணி செய்துவருகிறார். தசா நாதன் வலுவாக இருக்கிறார். தசாநாதன் வலுவாக இருப்பதால் இவருக்கு புதன் காரத்துவம் வகிக்கும் ஆசிரியர் பணியில் இருக்கிறார்.

ஜாதகத்தில் அதிகமான கிரகங்கள் வலுவாக இருப்பதால் நல்ல வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். புதன் பனிரெண்டாவது வீட்டில் இருப்பதால் இவருக்கு மருத்துவசெலவு மட்டும் அடிக்கடி வைத்துவிடுகிறார். அந்த காரணத்தால் என்னை வந்து சந்தித்தார்.

புதனுக்கு மட்டும் பரிகாரம் செய்தால் போதும் என்று சொல்லி அதற்கான பரிகாரத்தை மட்டும் சொன்னேன். புதன் கிழமையில் சக்கரத்தாழ்வாரை வணங்கி வாருங்கள் என்று சொன்னேன். புதன் கிரகம் பிரச்சினை தந்தால் சக்கரத்தாழ்வாரை வணங்கினால் போதும். நோயின் பிடியில் இருந்து தப்பிக்க இந்த வழிபாடு நன்றாக இருக்கும். ஒன்பது புதன்கிழமை அவருக்கு தீபம் ஏற்றி வணங்கி வந்தால் புதனால் வரும் நோய் தீரும். தோல் வியாதிகள் வரும் நபர்கள் கூட இந்த பரிகாரத்தை பின்பற்றி வரலாம்.

 
நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.