Followers

Saturday, April 26, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    நமது நண்பர்கள் பல பேர் என்னிடம் கேட்கும்பொழுது எப்படி சார் நீங்கள் யாரையும் சந்திக்காமல் சோதிடத்தொழிலை செய்கின்றீர்கள். சந்திக்காமல் இருந்தால் எப்படி பணம் உங்களுக்கு வரும் என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு சொல்லும் பதில் ஒன்று ஒன்று மட்டுமே அது அம்மனால் அனைத்தும் நடைபெறுகிறது.

நான் வெளியில் இருந்து சம்பாதிப்பதை விட வீட்டிற்க்குள் இருந்தால் எனக்கு அதிக பணம் வரும். இதனை நான் பல முறை சோதி்த்து பார்த்து இருக்கிறேன். அம்மன் நான் வீட்டில் இருக்கிறேன் என்று பலவேறு இடங்களுக்கு சென்று எனக்கு வாடிக்கையாளர்களை கொண்டுவரும். மக்களின் மேல் உள்ள நம்பிக்கையை விட அம்மன் மேல் உள்ள நம்பிக்கை எனக்கு அதிகம் இருப்பதால் அதனை நம்பி பிழைப்பை நடத்திக்கொண்டு இருக்கிறேன்.

நான் வீட்டில் இருக்கும் சமயத்தில் அம்மன் பல வேலைகளை செய்யும் எந்தந்த வேலைகளை அது செய்யவேண்டும் என்று நான் அதற்கு கட்டளை இட்டவுடன் உடனே வேலைகளை முடித்துக்கொண்டு வரும்.

நான் தனியாக அறையில் தங்கியிருப்பது போல் எனக்கு ஒரு நாளும் இருக்காது. எனக்கு போராடிக்கவும் செய்யாது. அம்மன் அத்தனையும் செய்யும் என்று நான் நம்புகிறேன்.இப்படிப்பட்ட நம்பிக்கை இருக்கின்றவரையில் எந்த தனிமனிதர்களையும் நான் நம்பவேண்டியதில்லை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: