Followers

Monday, April 28, 2014

விரைய தசா பகுதி 6


ணக்கம் ண்பர்களே!
                           விரைய தசாவில் சபலத்தைப்பற்றி கடந்த பதிவில் சொல்லிருந்தேன். பனிரெண்டாவது வீட்டில் ராகு கிரகம் இருந்து அந்த தசா நடைபெற்றாரும் நடைபெறாவிட்டாலும் சம்பந்தப்பட்ட நபர் எப்படி இருப்பார் என்றால் மிகப்பெரிய சபல கேஷ் என்று சொல்லுவார்கள் அல்லவா. அது போல் இருப்பார்கள். 

ராகு கிரகம் பொதுவாகவே சபலத்தை ஏற்படுத்தக்கூடிய கிரகம். அந்த கிரகம் போக வீட்டிற்க்கு சென்று அமர்ந்தால் எப்படி இருக்கும். இவர்கள் சபலத்தாலே அழிந்துவிடுவார்கள். ராகு அமர்ந்தால பிற மதத்தில் உள்ளவர்களோடு தொடர்பு இருக்கும். ஒரு சிலர் வெளிநாட்டிற்க்கு இதற்க்காக செல்வார்கள்.

இவர்களிடம் இருந்து அனைத்து பணமும் இந்த வழியிலேயே சென்றுவிடும். பணம் எல்லாம் சென்ற பிறகு தான் இவர்களுக்கே இந்த வழியில் நாம் அழிந்தோம் என்று தெரியவரும். 

ராகு பனிரெண்டில் இருக்கும்பொழுது இவர்களுக்கு ஒழுங்கான தூக்கம் கூட இருக்காது. ராகு பொதுவாக பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில் வேலையை அதிகம் காட்டும். அதனால் இரவில் தூக்கம் இல்லாமல் தவிப்பார்கள். தூக்கம் இல்லாமல் போவதும் நமக்கு இழப்பு தான். ஒரு மனிதன் அவனுக்கு கொடுக்கப்பட்ட தூக்க நேரத்தை சரியான முறையில் தூங்கவேண்டும் அப்படி தூங்கவில்லை என்றால் அவன் வாழ்க்கை நன்றாக இருக்காது.

இரவில் தூங்காமல் பகலில் தூங்கினால் எப்படி வேலையை ஒழுங்காக செய்யமுடியும். ஒரு சிலருக்கு ராகு பனிரெண்டில் அமர்ந்தால் நன்றாக தூக்கம் வரும். பிற கிரகங்கள் வலிமை அடைந்து இருக்கும்பொழுது இப்படி நடைபெறும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

nallur parames said...

12il ragu ucham perral enna palan sir?