Followers

Saturday, April 26, 2014

அஷ்டமசனி மற்றும் சந்திரபுக்தி


ணக்கம் ண்பர்களே!
                    ஒருவருக்கு மரணம் வருவதை அந்தகாலத்தில் உள்ள சோதிடர்கள் போல் இந்த காலத்தில் உள்ள சோதிடர்களால் அவ்வளவு துல்லியமாக கண்டுபிடிக்கமுடிவதில்லை. பல காரணங்கள் சொல்லுகிறார்கள். ஒரு வேளை இப்படி கண்டுபிடிப்பவர்களை நான் சந்தித்தது இல்லையோ என்று எனக்கு தெரியவில்லை. மரணத்தைப் பற்றி பல சோதிட தகவல்கள் சொல்லியுள்ளளார்கள். அதில ஒரு சின்ன தகவலை உங்களுக்கு சொல்லுகிறேன்.

மரணத்திற்க்கு என்று பல கிரகங்களின் மற்றும் வீடுகளின் நிலையை சொன்னாலும் அஷ்டமசனியால் கூட ஒருவருக்கு மரணம் ஏற்படும். பல கும்ப ராசிகாரர்களை நான் சென்ற அஷ்டமனியின் காலத்தில் பார்த்து இருக்கிறேன். அவர்கள் மரணத்தை எய்தியுள்ளனர்.

அஷ்டமசனியும் ஒருவருக்கு மரணத்தை தரும். அதிலும் அஷ்டமசனியின் காலத்தில் சந்திரனின் புக்தி மட்டும் நடக்ககூடாது. அப்படி நடந்தால் அவர்களுக்கு மரணம் என்பது நிச்சயம் நடந்துவிடும். எந்த கிரகத்தின் தசா புத்தியாக இருந்தாலும் அதில் சந்திரன் புக்தி நடக்ககூடாது. 

இவர்களுக்கு பரிகாரமாக என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். அஷ்டமசனி மற்றும் சந்திரன் புக்தி நடைபெறும் காலத்தில் திங்கள்கிழமை தோறும் சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இப்படி செய்யும்பொழுது உங்களுக்கு வரும் கண்டம் தள்ளிபோய்விடும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: