Followers

Thursday, April 24, 2014

மாற்றம் வருமா?


வணக்கம் நண்பர்களே !
                   மாற்றங்கள் வருமா என்றவுடன் அரசியலில் மாற்றம் வருமா என்பதைப்பற்றி எழுதுகிறார் என்று நினைக்கவேண்டாம். உங்களின் வாழ்க்கையில் மாற்றம் வருமா என்று பார்க்கவேண்டும். ஏன் இந்த நேரத்தில் இந்த பதிவு என்றால் தொடர்ச்சியாக கிரக பெயர்ச்சிகள் நடைபெறபோகின்றது. 

கோச்சார பலனை வைத்தே நாம் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் மனிதர்கள் அல்லவா. அந்த கோச்சாரப்பலன்களுக்குரிய கிரகங்களின் பெயர்ச்சியில் உங்களின் மாற்றங்கள் வருமா என்பதை மட்டும் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கோச்சாரப்பலன்களில் தான் பல மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி ஓட்டிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் அனைவரும் வரும் கிரகப்பெயர்ச்சியில் எப்படி மாற்றம் வரும். அதனை முழுமையாக நாம் அனுபவிக்க என்ன செய்யவேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டுவிட்டால் வருகின்ற நல்ல பலனை பெருக்கிகொள்ளலாம். வருகின்ற தீயபலனை குறைப்பதற்க்கு என்ன வழி என்பதை பார்த்துக்கொள்ளலாம் அல்லவா.

இப்பொழுதே அதற்க்கான வழியை தேர்ந்தெடுத்துக்கொள்வது நல்லது. கோச்சாரப்பலன்கள் பற்றி உங்களுக்கே நன்றாக தெரியும். அதனை வைத்து நீங்களே உங்களின் ஜாதகத்தில் உள்ளவற்றை தெரிந்துக்கொள்ளமுடியும். உடனே தயாராகி காரியத்தில் இறங்கி நல்ல பலனை தக்கவைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: