Followers

Friday, April 18, 2014

உடனே பலன் தரும் கிரகம்


வணக்கம் நண்பர்களே!
                   ஒரு சில நண்பர்கள் என்னிடம் பரிகாரம் செய்தால் ஒன்றும் நடைபெறவில்லை என்று கேட்பார்கள். அதாவது கிரகங்களை வழிப்பட்டால் ஒன்றும் பலன் தருவதில்லை என்று கேட்கிறார்கள். மக்களின் மனநிலை உடனே நடைபெறவேண்டும். ரெடிமேட் ஆடைபோல் உடனே பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

பொதுவாக ஒவ்வொரு கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்தாலும் அது பலனை தரும் என்ன என்றால் நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும். கிரகங்களில் மிகவும் வேகமான ஒரு கிரகம் அதாவது உடனே பலனை தரும் கிரகம் என்று ஒன்று இருக்கிறது அது தான் செவ்வாய்கிரகம்.

செவ்வாய்கிரகத்திற்க்கு மட்டும் நீங்கள் பரிகாரம் செய்தால் உடனே பலனை கொடுத்துவிடும். என்ன ஒன்று என்றால் இதற்கு பரிகாரம் செய்யும்பொழுது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அதாவது தவறுதலாக செய்தால் உடனே பலிவாங்கிவிடும்.

நன்றாக விரதம் இருந்து செவ்வாய்கிரகத்திற்க்கு நீங்கள் பரிகாரம் செய்யும்பொழுது உங்களுக்கு பலனை உடனே தந்துவிடும். உங்களுக்கு தேவையானவற்றை செவ்வாய் கிரகத்திடம் கேட்டு பெறமுடியும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sevvai kiraka Parikaaram prri vilakkamaaka sollunga.