Followers

Friday, April 11, 2014

சுக்கிரனுக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு மனிதன் எந்த கிரகத்திற்க்கு பரிகாரம் செய்கிறானோ இல்லையோ சுக்கிரன் கிரகத்திற்க்கு கண்டிப்பாக பரிகாரம் செய்வான். ஏன் என்றால் அவர் செல்வ வளத்தை நிறைய கொடுப்பார் என்ற நம்பிக்கையில் செய்வார்கள்.

சுக்கிரனுக்கு நிறைய பரிகாரங்களை நான் சொல்லிருந்தாலும் இந்த பரிகாரம் கூட பழைய பதிவில் சொல்லியுள்ளேன். ஒரு ஏழை பெண்ணிற்க்கு ஆடைகளை தானம் செய்யவேண்டும். ஏழைக்கு ஆடைகளை நாம் தானம் செய்தால் சுக்கிரனின் முழு ஆசியும் நாம் பெற்றுவிடலாம்.

ஒரு பணக்காரர் எனக்கு நிறைய உடைகளை கொடுப்பார். எனக்கு அப்பொழுது இந்த விவரம் தெரியாது. அவரிடம் யார் யார் பழகுகிறார்களோ அவர்களுக்கு அனைவருக்கும் ஆடைகளை தானம் செய்வார். மாதத்திற்க்கு ஒரு முறை ஒரு சட்டையாவது எடுத்து கொடுப்பார். அவரிடம் பணம் நிறைய இருக்கிறது என்பதால் ஏழைகளுக்கு தானம் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.

நான் சோதிடம் எல்லாம் படித்தபிறகு தான் தெரிந்தது. அவர் எதற்க்காக இதனை எல்லாம் செய்திருக்கிறார் என்று புரிந்தது. அவரைப்போல் பல பணக்காரர்கள் இப்படி செய்வது எல்லாம் அவர்களிடம் பணம் மேலும் மேலும் வரவேண்டும் என்பதற்க்காக இதனை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்களும் இப்படி செய்துக்கொண்டு உங்களின் பொருளாதார தேவைகளை மேம்படுத்திக்கொள்ளுங்கள். நாம் கொடுக்கும் அனைத்து தானமும் நமக்கு பன்மடங்காக திரும்பிவருகிறது என்பது மடடும் எனது அனுபவ உண்மை.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: