Followers

Friday, April 11, 2014

அம்மன் அருள்


வணக்கம் நண்பர்களே!
                    நிறைய நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசி சந்திக்கவேண்டும் என்று கேட்கிறார்கள். ஒரு சில நண்பர்கள் அவ்வப்பொழுது என்னை வந்து சந்தித்து பேசிவிட்டும் செல்லுகின்றனர். புதிய அலுவலகத்தை நான் திறந்தாலும் அந்த இடத்திற்க்கு செல்லுவது வாரத்திற்க்கு ஒரு முறை மட்டுமே. அனைத்தும் வீட்டில் இருந்தே பதிவுகள் தந்துக்கொண்டிருக்கிறேன்.

எனது அறையில் இருந்து பதிவுகள் தருகிறேன். எனது அறையில் இருக்கும்பொழுது அம்மனின் வேலையை அதிகப்படுத்த முடியும் என்பதால் அப்படி செய்துக்கொண்டிருக்கிறேன்.

அம்மனின் வேடிக்கை
                    ஒரு சில நண்பர்கள் என்னை ஏதாவது ஒரு காரணத்திற்க்காக தேடி வரும் நண்பர்களை ஒரு சில சோதனை செய்வது உண்டு. அது வேண்டும் என்றே நான் அப்படி செய்வேன். அதுவும் எனக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ள நண்பர்களுக்கு மட்டும் செய்வது உண்டு. அம்மனை வைத்து நான் ஒரு ஏமாற்றுக்காரன் போல் அவர்களின் கனவில் காண்பிப்பது உண்டு.

ஒரு சிலருக்கு அம்மனை வைத்து அவர்களின் கனவில் நேராக சென்று பூ கொடுப்பது போல் செய்வது உண்டு. ஒரு சில நண்பர்கள் கணவன் மனைவிக்குள் பிரச்சினை என்று வருவார்கள். அவர்களுக்கு இனிமையான கனவுகளை உருவாக்கி அவர்களை சேர்த்து வைப்பதும் உண்டு.

ஒரு சிலரை பயமுறுத்துவதும் உண்டு. இதனை எப்பொழுதாவது செய்வது உண்டு. ஒரு சிலருக்கு அந்த ஊரில் உள்ள பெரிய விஐபி வந்து நேரிடையாக சந்திப்பது போலவும் செய்வதும் உண்டு. எப்பொழுதாவது சும்மா இருந்தால் இப்படி விளையாடி பார்ப்பது உண்டு. பயம் எல்லாம் வேண்டியதில்லை அனைத்தும் அம்மனின் நல்ல செயலால் செய்வது உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.