Followers

Thursday, April 24, 2014

விரைய தசா பகுதி 4



வணக்கம் நண்பர்களே!
                  ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மீக தேடுதல் இயற்கையில் இருக்கும் என்று சொல்லிருக்கிறேன். குரு கிரகம் பனிரெண்டாவது வீட்டில் தங்கி தன் தசாவை நடத்தும்பொழுது உங்களுக்கு கண்டிப்பாக மோட்சம் கி்டைக்கும். 

மோட்சத்திற்க்கு முதலில் என்ன வேண்டும் என்றால் நமக்கு ஒரு குரு கிடைக்கவேண்டும். குரு உங்களுக்கு அமைவார். ஆன்மீக சம்பந்தப்பட்ட வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். உங்களின் நேரம் பல நாட்கள் ஆன்மீகத்திற்க்கு என்றே செலவு செய்வீர்கள். நேரமும் செலவும் தான் ஆனால் யாரும் அதனை பார்த்துக்கொண்டு இருப்பதில்லை,

குரு கிரகம் நன்றாக அமையாமல் போனால் உங்களை ஆன்மீகவாதிகள் ஏமாற்றுவார்கள். அதனை செய்து தருகிறேன் என்று சொல்லி உங்களிடம் இருந்து பணத்தை பிடிங்கிவிடுவார்கள். இன்றைய காலகட்டத்தில் இது தானே உலகம் முழுவதும் நடைபெறுகிறது.

ஒரு சிலருக்கு கோவில் விழாக்களில் மரியாதை கொடுக்காமால் உங்களை அவமதிப்பு செய்வார்கள். உடனே நீங்களும் பெரிய பிரச்சினையை கிளப்பிவிடுவீர்கள். அது உங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

கோவில் குளங்கள் என்று ஒரு சிலரை விசிட் அடித்துக்கொண்டே இருப்பது போல் செய்துவிடும். அங்கு செல்வதை முதல் வேலையாக வைத்திருப்பீர்க்ள். 

பொதுவாக குரு பனிரெண்டில் இருக்கும்பொழுது அதாவது நன்றாக இருந்தால் நீங்கள் ஆன்மீகவாதிகளாக இருப்பீர்கள். பனிரெண்டில் கெட்டு அமர்ந்தால் அதிக அவமானத்தை தெய்வீக வழியில் மற்றும் ஊர் பொதுவிசயங்கள் வழியாக உங்களுக்கு கெட்ட பெயர் கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: