Followers

Tuesday, April 8, 2014

செவ்வாய் தோஷம்


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைக்கு மனிதர்களுக்கு நிறைய தோஷங்கள் ஏற்பட்டு அதனால் கஷ்டப்படுகின்றனர். தோஷங்களால் பாதிக்கப்படகூடாது என்று நினைப்பவர்கள் அதாவது தப்பிக்கவேண்டும் என்று நினைக்கும் மனிதன். பாவங்களை செய்வதற்க்கு அஞ்சமாட்டேன்கிறான். என்ன செய்வது மனிதன் பேராசைப்படுகிறான். 

எப்படியாவது சம்பாதிக்கவேண்டும் அதே நேரத்தில் எளிமையாக சம்பாதிக்கவேண்டும். பணம் வந்துக்கொண்டே இருக்கவேண்டும். சொத்துக்கள் நிறைய வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஜாதகத்தில் மிகப்பெரிய தோஷமாக செவ்வாய் தோஷம் கருதப்படுகிறது. மக்களிடம் நல்ல சோதிட பேச்சு செல்வாக்கை பெற்றது இந்த செவ்வாய் தோஷம். இந்த தோஷம் ஏற்படுவதற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் முதல் காரணமாக பல சோதிடத்தில் தெரியும் உண்மை என்ன என்றால் சொந்த சகோதர்களின் நிலத்தை அபகரித்தது தான் முதல் காரணமாக தெரிகிறது.

சகோதர்களின் சொத்துக்களை சரியாக பங்களித்துக்கொடுக்காமல் இவர்கள் அந்த சொத்துக்களை பெரும்பகுதியை எடுத்துக்கொள்கிறார்கள்.நாம் சம்பாதிக்காத சொத்தை ஏன் நாம் அல்லது நமது குழந்தைகள் அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பதில்லை. வரும் வரை வரட்டும் என்று எடுப்பதால் நிலக்காரகன் வகிக்கும் செவ்வாய் கிரகம் தோஷமாக உங்களின் குழந்தைகளின் ஜாதகத்தில் அமர்ந்துவிடுகிறது. 

செவ்வாய் தோஷம் ஏற்பட்டவுடன் அது வேலை செய்யாமல் இருக்காது. சும்மா கோபத்தை வெளிக்காட்ட தொடங்கிவிடும். யார் கையிலாவது வெட்டுப்பட்டு சாகவேண்டியது தான். இரத்தத்தை வெளியில் எடுக்காமல் விடாது.இரத்த உறவுகளை ஏமாற்றியதால் இரத்தத்தை எடுக்கிறது.

செவ்வாய் கிரகத்திற்க்கு தகுந்த பரிகாரம் செய்யவும் இனிமேல் சகோதர்களின் நிலங்களை எடுக்காமல் அவர்களிடம் விட்டுக்கொடுத்துவிடவும். உங்களின் தலைமுறை நன்றாக இருக்கவேண்டும் என்றால் இதனை செய்யலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: