Followers

Tuesday, April 8, 2014

அட பெருமாளே!


ணக்கம் ண்பர்களே!
                    நாம் பெருமாளையும் வணங்குவோம் சிவனையும் வணங்குவோம் ஆனால் பெருமாளை வணங்குகின்ற எனது நண்பன் ஒருவன் இருக்கிறான் பெருமாள் மட்டும் கடவுள் பிறர் யாரும் கடவுள் இல்லை என்பதுபோல் நடந்துக்கொள்வான். 

அவன் வணங்குவது அவனின் தனிப்பட்ட இஷ்டம் என்று இருந்துவிடலாம். அப்படி என்ன தான் பெருமாளிடம் விசேசம் இருக்கின்றது என்று நண்பனிடம் கேட்டேன். அவன் என்னிடம் சொன்னான். பெருமாளை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் அதனால் வணங்குகிறேன் என்றான்.

மோட்சத்தை பெறுகிறவன் மாதிரி உன்னை பார்த்தால் தெரியவில்லையே என்றேன். ஏன் என்றால் அவனிடம் சொந்தமாக ஒரு ஆடி கார் உள்ளது. ஒரு தனிப்பட்ட மனிதன் நியாயமாக சம்பாதித்தால் ஒரு சைக்கிள் வாங்குவது கூட கடினமான உலகத்தில் ஆடி காரை வைத்துக்கொண்டு மோட்சம் பற்றி பேசிகிறானே என்று அவனிடம் சொன்னேன்.

நீ எப்படி இருந்தாய் என்று எனக்கு தெரியும். இப்பொழுது எப்படி இருக்கின்றாய் என்பது பற்றியும் தெரியும். உனக்கு மோட்சம் தான் குறிக்கோள் என்றால் நீ துளசி மாலையை கையில் வைத்துக்கொண்டு திவ்யதேசத்திற்க்கு நடந்துக்கொண்டிருப்பாய். நீ மோட்சத்தைப்பற்றி பேசிகிறாயா என்று கேட்டேன்.

அவன் உண்மையை ஒற்றுக்கொண்டான். பெருமாளை வணங்கினால் நல்ல காசு வரும் என்று எனது தந்தை சொன்னார் டா. நானும் வணங்கினேன். எனக்கு பணம் வந்துவிட்டது. மோட்சத்தை பற்றி எல்லாம் எனக்கு கவலையில்லை. யாரும் கேட்டால் சொல்லுவேன் என்றான்.

எனது நண்பனை போல் தான் பெருமாளை வணங்குபவர்களும் இருந்தால் தயவு செய்து வணங்காதீர்கள். காசுக்காக வணங்குகிறேன் என்று சொல்லிவிடுங்கள். மனிதனை பொருத்தவை உள்குத்து இல்லாமல் வணங்கமாட்டான். காசுக்காக வணங்குகிறேன் என்று சொல்லுங்கள். அவர் பணத்தை கொடுப்பார். உங்களுக்கு பணத்தை கொடுத்தால் கண்டிப்பாக மோட்சத்தை அவர் தரவே மாட்டார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sir naanum perumaalai vaaraa vaaram sanikilamaiyanru vanangkukiren.en mudhal venduthal mana nimmadhi,appuram sellvam.