Followers

Thursday, April 10, 2014

சோதிட அனுபவம்


வணக்கம் நண்பர்களே!
                    ஒரு பெண்ணின் ஜாதகத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்தேன். அவரின் கணவன் ஈவு இரக்கமற்றவனாக இருக்கிறார். அவர் தினமும் இவரை வந்து மதுவை குடித்துவிட்டு தொந்தரவு செய்கிறார் என்று சொன்னார்.

சனியும் செவ்வாயும் சேர்ந்து ஏழாவது வீட்டில் இருந்து. அந்த பெண்ணின் ஜாதகத்தை மட்டும் பார்த்தேன். சனியும் செவ்வாயும் சேர்ந்து ஏழாவது வீட்டில் இருந்தது. அந்த பெண்ணிற்க்கு உடல்நிலையில் பாதிப்பு இருந்தது. பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தார்.

தற்பொழுது அந்த பெண்ணிற்க்கு சுக்கிரன் தசா நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. சுக்கிரன் தசாவில் சுயபுத்தி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது தெரியவந்தது. 

நான் பொதுவாக சோதிடம் பார்த்தால் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தையும் வாங்கி பார்ப்பது வழக்கம். ஏன் என்றால் அப்பொழுது தான் அவர்களின் உண்மையான நிலையைபபற்றி ஒரளவு நாம் தெரிந்துக்கொள்ளமுடியும்.

அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களின் ஜாதகத்தை பார்த்த பொழுது அனைவருக்கும் சுக்கிரன் பனிரெண்டாவது வீட்டில் சென்று அமர்ந்தது தெரியவந்தது. அவரின் தந்தையிடம் நீங்கள் பெண்களுக்கு துரோகம் செய்து இருக்கின்றீர்களா என்று கேட்டேன்.

அவர் ஆமாம் என்று ஏற்றுக்கொண்டார். நான் ஒரு பெண்ணை காதலித்து வந்தேன். அந்த பெண் ஒரு ஏழை பெண் என்பதால் எனது தந்தை வேறு இடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தார். 

எனது திருமணத்திற்க்கு பிறகு அந்த பெண் இறந்துவிட்டார் என்று சொன்னார். அப்பொழுது தான் அவரிடம் சொன்னேன். நீங்கள் செய்த பாவம். உங்களின் மகள்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது என்று சொன்னேன்.

அந்த பெண்ணின் வீட்டில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன். அவர் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை எ்ன்று சொன்னார். அவரிடம் முடிந்தால் தேடிப்பார்த்து அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யமுடியுமா என்று பாருங்கள். அப்படி அவர்கள் உங்களுக்கு அகப்படவில்லை என்றால் ஏழை பெண்களின் திருமணத்திற்க்கு உதவி செய்யுங்கள். உங்களின் மகள்கள் நன்றாக வாழ்வார்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

நாம் ஒரு தவறு செய்தாலும் அது இந்த ஜென்மத்திலேயே நம்மை தேடி வந்துவிடும். பல பேருக்கு வந்துக்கொண்டு இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.