Followers

Wednesday, April 16, 2014

மறுபிறவி பகுதி 9


வணக்கம் நண்பர்களே!
                    மறுபிறவி தொடரில் இப்பதிவில் ரிஷப லக்கினத்தில் ஒருவர் பிறந்தால் அவருக்கு அடுத்த பிறவி எப்படி அமையும் என்பதைப்பற்றி பார்க்கலாம்.

ரிஷப லக்கினம்
              நாம் ரிஷபலக்கினத்திற்க்கு எப்படி மரணம் ஏற்படும் என்பதைப்பற்றி முதலில் பார்த்துவிடுவோம். இவருக்கு மரணம் ஏற்படுவது இயல்பாக இருக்கும். அதிகம் அவதிப்பட தேவையில்லை. பிற கிரக நிலைகளைப்பொறுத்து மரணத்தை கணித்துக்கொள்ளவும். பொதுவாக அமைதியான மரணம் வரும் என்று ஏற்றுக்கொள்ளலாம்.

அதிகப்பட்சம் இவர்களின் மூதையரின் நோயை தழுவியே மரணம் வரும். மரணப்படுகையில் அதிகநாட்கள் இருக்கவேண்டியதில்லை. பேசிக்கொண்டு இருக்கும்பொழுதே உயிரை விடுவதற்க்கும் வாய்ப்புகள் அதிகம்.சர்க்கரை நோயால் கூட ஒரு சிலர் இறந்து இருக்கின்றனர். இதயத்தில் பிரச்சினை ஏற்பட்டும் ஒரு சிலருக்கு மரணம் வரும். இந்த லக்கினக்காரர்க்கு நல்ல மரணம் ஏற்படும் என்று சொல்லலாம்.

மறுபிறவி
         உங்களின் வீட்டில் இருந்து தென்மேற்கு திசையில் பிறப்பு எடுப்பீர்கள். உங்களின் வீட்டில் அதிகப்பட்சம் நான்கு பேர் இருப்பீர்கள். அனைவரும் உயரமாக இருப்பார்கள். பாதுகாப்பு சம்பந்தமான பணியில் அதிகம் நீங்கள் ஈடுபடுவதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வீட்டிற்க்கு அருகில் முருகன் கோவில் அல்லது முனியப்பன் சாமி போன்ற கோவில்கள் இருக்கும். சிவன் கோபத்தோடு இருக்கும் கோவிலாக கூட இருக்கலாம். உங்களின் வீட்டிற்க்கு அருகில் மிகப்பெரிய தொழிற்சாலை கூட இருக்கும்.

என்ன ரிஷப ராசியை லக்கினமாக கொண்டவர்களே ஒரளவு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்கள் அடுத்த பிறவியில் அதிகவெப்பமான பகுதியில் பிறப்பதற்க்கு வாய்ப்பு இருக்கிறது. 

ரிஷபராசி நண்பர்களே அனைத்தும் பொதுவான தகவல் மட்டுமே. என்ன இப்படி சொல்லிவிட்டாரே என்று கவலைப்படதேவையில்லை. ஒரு முறை படித்துவிட்டு உங்களின் மனதோடு உரையாடிப்பார்த்தால் அனைத்திற்க்கும் விடை கிடைக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

KJ said...

Sir, If kethu is in 12 house, that is his last birth?