Followers

Sunday, April 20, 2014

ஆன்மீக அனுபவங்கள் 161


ணக்கம் ண்பர்களே!
                    பெருமாளை பற்றி எழுதியவுடன் எனது நண்பர் ஒரு போனில் தொடர்புக்கொண்டு கேட்டார். அவர்க்கும் மற்றும் உங்களுக்கும் புரியும் விதத்தில் ஒரு சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

அனைவரும் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்ற எண்ணம் இயற்கையிலேயே நமது ஆத்மாவில் படிந்து இருக்கிறது. முதலில் உங்களை உணரவேண்டும். உங்களுக்குள் என்ன இருக்கிறது என்று பார்த்துவிட்டால் போதும். அதன் பிறகு சிவனா ,பெருமாளா, அம்மனா அல்லது வேறு ஒன்றா என்று பார்த்துக்கொள்ளலாம்.

நாம் யார் யாரையே நம்பி போகதேவையில்லை. முதலில் உங்களை நம்புங்கள். இந்த உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள் இருக்கின்றது என்று சொன்ன மனிதன். மனிதன் தான் உலகத்தில் மிகப்பெரிய அதிசயம் என்பதை தெரியாமல் விட்டுவிட்டான்.

ஒவ்வொரு மனிதனும் அதிசயம் என்று உணர்ந்துவிட்டால் உங்களுக்குள் ஆன்மீகம் வந்துவிடும். உங்களின் மனதை நம்பிவிட்டால் போதும் சர்வ வல்லமை உடையவராக உங்களை மாற்றிவிடும். அதன் பிறகு பிற கடவுளை பார்த்துக்கொள்ளலாம்.

உங்களின் மனதை தட்டிக்கொடுத்து வேலை வாங்க கற்றுக்கொண்டுவிட்டால் அதன் பிறகு நீங்கள் தான் மிகப்பெரிய சக்தி உடையவர். என்னுடைய மனம் தான் எனக்கு மிகப்பெரிய சக்தி என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களை தேடி உலகம் வரும்.

உங்களுக்கு பிறகு தான் சிவன், பெருமாள் எல்லாம் என்பதை அப்பொழுது புரிந்துக்கொள்ளலாம். பிரபஞ்சத்தில் சக்தி இருக்கின்றதை நான் ஏற்றுக்கொள்கிறேன். முதலில் உங்களின் சக்தியை உணர்ந்துக்கொண்டால் பிரபஞ்ச சக்தி உங்களை நோக்கி ஒடிவரும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: