Followers

Saturday, April 19, 2014

ரிஷபராசியும் நல்ல குணமும்


வணக்கம் நண்பர்களே!
                    ரிஷப ராசியைப்பற்றி கொஞ்சம் சொல்லவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கடந்த ஒரு வாரக்காலமாக இந்த நினைப்பு இருந்து வந்தது இன்று தான் அதற்க்கான நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். 

ரிஷப ராசி சுக்கிரனின் வீடு என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த ராசியை உடையவர்களை பார்த்தால் புதுவித கண்டுபிடிக்களை கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். எப்ப பார்த்தாலும் ஏதாவது ஒரு கண்டுபிடிப்பில் அதிக கவனம் செலுத்திக்கொண்டு இருப்பார்கள்.

பறவைகள் மற்ற விலங்குகள் மீது அதிக கவனம் செலுத்தி வளர்ப்பது வீட்டில் மீன் தொட்டிகள் வைப்பது என்று தனி ஒரு கவனம் இதில் எல்லாம் இருக்கும். அதே நேரத்தில் பொதுவிசயங்களில் அதிக கவனம் செலுத்தி நல்லது செய்வதும் அதிகம் இருக்கிறது.

வளர்ப்பு பிராணிகள் மீதும் ஈடுபாடு இருக்கும். இதற்க்காகவே படிப்பு எல்லாம் படிப்பார்கள். கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கண்டுபிடித்துவிட்டு கூலாக யாருக்காவது பயன்படட்டும் என்று சொல்லுவார்கள்.

ரிஷபராசியில் உள்ளவர்களின் தனிப்பட்ட நல்ல செயல்கள் இது. நான் பல பேரை கூர்ந்து கவனிக்கும்பொழுது அவர்களின் செயல் தெரியவந்தது. சுக்கிரன் என்ன தான் அசுரகுருவாக இருந்தாலும் நல்ல விசயங்களுக்கு மிகவும் அதிகபங்களிப்பை அளிக்கிறார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: