Followers

Monday, April 7, 2014

மறுபிறவி பகுதி 8



வணக்கம் நண்பர்களே!
                    மறுபிறவியைப்பற்றி பார்த்து வந்தோம் உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு லக்கினமாக பார்க்கலாம் என்று சொல்லிருந்தேன். இனி தொடர்ந்து ஒவ்வொரு லக்கினமாக பார்க்கலாம்.

மேஷ லக்கினம்
              மேஷ லக்கினத்தில் ஒருவர் பிறந்தால் அவரின் மரணத்தைப்பற்றி முதலில் நாம் பார்த்துவிடலாம். மரணத்தைப்பற்றி தெரிந்தால் தானே மறுபிறவியைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். பயம்கொள்ள தேவையில்லை. அனைத்தும் பொதுபலன்கள்.

உங்களின் மரணம் என்பது பெரும்பாலும் விபத்துக்கள் போல் தான் வரும். வெடிவிபத்துகள் அல்லது தீ விபத்துக்கள் வழியாக வரும். கடுமையான உடல் காய்ச்சல் வழியாகவும் வரும். அதிகமான இரத்ததை நீங்கள் மரணக்காலத்தில் சிந்த நேரிடும். பிறர் வெட்டுவது வழியாகவும் மரணம் ஏற்படலாம். ஜாதகத்தில் நான்கு கிரகங்கள் வலுவடைந்து எட்டாவது வீட்டில் இருந்தால் மலையில் இருந்து விழுந்து கூட மரணம் ஏற்படும் அல்லது இடி உங்களின் மீது விழுந்து கூட அகால மரணம் ஏற்படலாம்.

அம்மை நோய் வழியாகவும் இறப்பு ஏற்படலாம். ஒரு சிலருக்கு கல்லில் அடிப்பட்டு கூட மரணம் ஏற்படும். கொடி நோய் வந்து வருவதற்க்கும் வாய்ப்பு இருக்கிறது.

பூர்வபுண்ணியம் நன்றாக இருந்தால் மற்றும் இந்த ஜென்மத்தில் நல்லது செய்து இருந்தாலும் உங்களின் மரணம் உடல் காய்ச்சல் மட்டும் ஏற்பட்டு மரணம் அடைவீர்கள். 

என்ன இப்படி எங்களை பயம்கொள்ள செய்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம் மேஷ லக்கின அன்பர்களே. அனைத்தும் பொதுப்பலன்கள் மட்டுமே. மரணத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டால் உங்களின் அதிவேகத்தை குறைத்துக்கொள்ளலாம் அல்லவா.

மறுபிறவி

உங்களின் வீட்டிலிருந்து வடகிழக்கு பகுதியில் நீங்கள் மறுபிறவியை எடுப்பீர்கள். எத்தனை கிலோ மீட்டரில் பிறப்பீர்கள் என்பதைப்பற்றி எல்லாம் இப்பொழுது பார்க்கவேண்டாம் ஏன் என்றால் அப்புறம் இப்பொழுதே அந்த ஊரில் போய் உட்கார்ந்துக்கொண்டுவிடுவீர்கள். 

இந்த உலகத்தில் சாதி மட்டும் அவ்வளவு எளிதில் ஒழியபோவதில்லை. சாதி இருக்கிறவரை நானும் கொஞ்சம் அந்த சாதியைப்பற்றி எல்லாம் சொல்லிவிடுகிறேன். யாரும் என்னை கோபப்படாதீர்கள்.

மேஷ லக்கின நண்பர்களே நீங்கள் ஒரு உயர் வகுப்பில் பிறப்பு எடுப்பீர்கள். இப்பொழுது இது மட்டும் போதும். நேரம் வரும்பொழுது எந்த சாதியில் பிறக்கபோகின்றீர்கள் என்று சொல்லுகிறேன்.

நீங்கள் பிறக்கபோகும் இடத்தில் பெரிய கோவில்கள் அதுவும் பெருமாள் கோவில் இருக்கும் நண்பர்களே. எப்படி பெருமாள் என்று சொல்லுகின்றீர்கள் என்று கேட்கதோன்றுகிறதா அம்மன் சொன்னது. ஒரு ஆச்சாரிய குடும்பத்தில் பிறக்கபோகின்றீர்கள். 

அடுத்த பிறவியில் கண்டிப்பாக நீங்கள் ஒரு வேதவிற்பன்னராக தான் பிறக்கபோகின்றீர்கள். உங்களின் குடும்பத்தில் எத்தனை பேர் என்று கேட்க தோன்றும் அல்லவா இரண்டு பேர். உங்களோடு ஒரு சகோதரி இருப்பார். உங்களின் குடும்பத்தில் மொத்தம் உங்களோடு நான்கு பேர் இருப்பார்கள்.

உங்களின் அப்பா ஒரு வேதவிற்பன்னராக தான் இருப்பார். உங்களின் அப்பா கொஞ்சம் பெண் சாயலில் இருப்பார். அட குடுமியாவது போட்டுக்கொண்டு இருப்பார்.

உங்களின் அம்மா கண்டிப்பாக ஒரு அரசாங்க வேலையில் இருப்பார். பெரிய வருமானமாக உங்களின் அம்மாவின் வருமானம் இருக்கும்.உங்களின் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழலாம்.

என்ன மேஷராசி நண்பர்களே மறுபிறவியைப்பற்றி தெரிந்துக்கொண்டீர்கள் அல்லவா. மறுபிறவியில் நிறைய தகவல் தரமுடியும். அனைத்தையும் நீங்கள் தெரிந்துக்கொண்டுவிட்டால் அடுத்த பிறவியில் நீங்கள் வாழும்பொழுது போராடித்துவிடும். இதற்கே போனபிறவியிலேயே ராஜேஷ் சொன்னான்டா என்று உங்களுக்கு உங்களின் உள்ளுணர்வு மறுபிறவியில் சொல்லும்.

நண்பர்களே அனைத்தும் பொதுவான தகவல்கள் நீங்கள் நம்புவதும் நம்பாததும் உங்களின் நம்பிக்கை சார்ந்த விசயம். கண்டிப்பாக நீங்கள் ஆன்மீகவாதியாக இருந்தால் உட்கார்ந்து உங்களின் சக்தியிடம் கேட்டால் என்னை தேடி வந்துவிடுவீர்கள்.

முக்கியமான தகவல் உங்களின் குடும்பத்தில் முன்னோர்கள் யாராவது இறந்து இருந்தால் அவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்து இப்படி தேடிப்பார்த்தால் கண்டிப்பாக அவர் நான் சொன்ன அடையாளத்தோடு வாழ்ந்துக்கொண்டிருப்பார். ஒரு வேளை பிறப்பு எடுக்காமல் கூட வாழ்ந்துக்கொண்டிருக்கலாம் இல்லையா. அவரின் மரணத்தை எடுத்து பார்த்தால் புரிந்துவிடும். தற்கொலை அல்லது விபத்து ஏற்பட்டு இருந்தால் அவர் பிறப்பு எடுக்க கொஞ்ச காலம் எடுக்கும். உங்களின் தாத்தா அல்லது பாட்டி என்று இருந்தால் அவர்களின் ஜாதகத்தை எடுத்துப்பார்க்கலாம்.

இதனை எழுதுவதற்க்கு முன்பு ஒரு சில ஜாதகங்களை வைத்து நான் ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கிறேன். நேரிடையாக அந்தந்த இடத்திற்க்கு சென்று பார்த்து தெரிந்துக்கொண்ட பிறகு எழுதுகிறேன்.  


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Kisshor kumar said...

நமக்கு வட கிழக்கு என்றால் சீனா அல்லது ஜப்பான் நாடு ஆகும். புத்தர் பெருமாளின் அவதாரம் ஆவார். எனவே சீன மற்றும் ஜப்பான் நாட்டில் புத்தர் கோவில்கள் (பெருமாள் கோவில்கள்) நிறைய உண்டு. சீன vethavirppannargal குடுமி வைத்திருப்பார்கள். எனவே மேஷ லஞத்தாரின் மறு பிறவி சீன அல்லது ஜப்பான் நாட்டில் தானே பிறப்பார்கள். நான் கூறுவது சரியா? எனது லக்கினம் மேஷம் ஆகும்.