Followers

Saturday, April 26, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    எனது நண்பர் என்னிடம் பேசும்பொழுது எப்படி நீங்கள் தொழில் செய்பவர்களுக்கு ஆன்மீக விசயங்கள் செய்துக்கொடுத்து அதில் இருந்து எப்படி பணம் பெறுகிறீர்கள் பணத்தை தருவார்களா என்று கேட்டார்.

என்னை பொருத்தவரை தனிநபருக்கு செய்வது கடினம் தொழில் செய்பவர்களுக்கு எளிதில் செய்யமுடியும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேலையாக செய்து வருவதால் எளிதில் அவர்களுக்கு ஒவ்வொன்றாக செல்லுகிறது.நீண்ட நாள் செய்கின்ற பலன் அது. பலன் சரியாக போய் சேரும்.

என்னைப்பொருத்தவரை தற்பொழுது எனக்கு அதிகளவில் வருமானம் வரும் வழியும் அது மட்டுமே. தொழில் செய்பவர்கள் மிகவும் நாகரீகமாக தான் என்னிடம் நடந்துக்கொள்கிறார்கள். 

நான் யாரையும் ஏமாற்றுவது கிடையாது. நான் யாருக்காவது செய்துக்கொடுத்த வேலை நடைபெறவில்லை என்றால் கூட அதற்கு வாங்கிய பணத்தை திருப்பி்க்கொடுத்துவிடுகிறேன். ஒரு சில விசயங்கள் காலம் தள்ளி தான் நடைபெறும் என்ற காரணத்தால் திருப்பிக்கொடுத்தவிடுவது உண்டு. ஏமாற்றுவது எனக்கு பிடிக்காத ஒன்று.

நம்பினால் நம்புங்கள்

ஒரு வருடங்களுக்கு முன்பு ஒரு திரைப்படத்தை தயாரித்த நபருக்கும் எனக்கும் கொஞ்சம் பிரச்சினை அவர் ஒரு விசயத்தில் என்னை ஏமாற்றினார். அவரிடம் சொல்லிவிட்டே செய்தேன். நீங்கள் என்னை ஏமாற்றிய காரணத்தால் உங்களின் படத்தை என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்கள் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். படம் வெளியாகி இரண்டு நாட்கள் கூட திரையரங்கத்தில் ஓடவில்லை. படத்தை தூக்கிவிட்டார்கள்.

பொதுவாக எதிர்வினைக்கு செல்வதில்லை. இறங்கிவிட்டால் ஆயிரம் கோடி கம்பெனியும் அரைநாள் தாங்காது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

No comments: