Followers

Saturday, April 5, 2014

மாந்தி


ணக்கம் ண்பர்களே!
                    மாந்தியை பற்றி பல பதிவுகளில் படித்துவிட்டு புத்தகங்களிலும் படித்துவிட்டு நமது மக்கள் மாந்திக்கு பரிகாரம் செய்கிறேன் என்று பல கோவிலுக்கு சென்று செய்கிறார்கள்.

மாந்திக்கு பரிகாரம் செய்யவேண்டும் என்பது எல்லாம் வேண்டாம். நீங்களே சென்று வழிபாட்டில் செய்யமுடியாத ஒன்று மாந்தி. அதற்கு என்று பயிற்சி செய்தவர்களை வைத்து மட்டும் செய்யவேண்டும்.

மாந்தியின் வேலைகள் அனைத்தும் மிகவும் ஆபத்தான வேலை. மாந்திக்கு கீழ் ஆவிகள் தான் இருக்கும். ஆவிகளில் நல்ல ஆவியும் இருக்கும் கெட்ட ஆவியும் இருக்கும். தேவையற்ற ஆவிகளை வீட்டிற்க்கு வரவழைக்கவேண்டியதில்லை. நீங்களே ஏன் மாட்டிக்கொள்ளவேண்டும்.

அனைத்து கிரகத்திற்க்கும் நீங்கள் பரிகாரம் செய்வது போல் மாந்திக்கு செய்யமுடியாத காரணமும் இது தான். தமிழ்நாட்டு சோதிடத்தில் மாந்தியைப்பற்றி குறிப்பது கூட தவிர்த்த காரணமும் இந்த காரணத்தால் மட்டுமே. கேரளாவில் மாந்தியை வைத்து தான் அனைத்து கிரகத்திற்க்கும் பரிகாரம் செய்வார்கள்.அவர்களின் வேலை வேறு விதமான ஒன்று. அதனால் நீங்கள் பிற கிரகத்திற்க்கு மட்டும் செய்துக்கொள்வது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Sir enakku 10m itathil lakkinaapadhi guruvudan serkkai enna palan?