Followers

Saturday, April 12, 2014

சேமிப்பு பழக்கம்


வணக்கம் நண்பர்களே!
                         வியாபாரத்தில் உள்ளவர்களும் குடும்பத்தில் இருப்பவர்களும் கணக்கு தொடங்க ஒரு நாளை பதிவில் தெரிவித்து இருந்தேன். அதனை படித்துவிட்டு அனைத்து நண்பர்களும் தொடங்கி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

உலகத்தை துறந்து விடுங்கள் என்று சொல்லும் சாமியார்களே இந்த காலத்தில் ஆடிட்டிங் செய்துக்கொண்டு தன் ஆசிரமத்தை வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். அவர்களே கணக்கு வழக்குகளை பார்க்கும்பொழுது நீங்கள் ஏன் மாதம் மாதம் கணக்குகளை பார்க்ககூடாது என்பது தான் எனது கேள்வியாக இருக்கும். 

பல நண்பர்கள் பெரிய கம்பெனிகளில் வேலைசெய்து இருந்தாலும் அவர்களின் குடும்பங்கள் கூட கணக்கு வழக்குகளை பார்க்காமல் இருந்துக்கொண்டு வருகின்றனர். இன்றைய காலகட்டத்தில் மாதம் மாதம் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் நடந்துக்கொண்டே இருக்கின்றது ஆனால் உங்களின் வருமானம் மட்டும் உயரவில்லை என்பது நன்றாக தெரிகிறது.

அரசியல்வாதிகள் இந்த நாட்டில் மாற்றம் என்பது எல்லாம் ஒருபொழுதும் கொண்டுவரபோவதில்லை இந்த நாட்டிற்க்கு தகுந்தமாதிரி உங்களை மாற்றிக்கொள்வது உங்களின் பொறுப்பு. இந்த மாதம் சம்பளம் வாங்கினால் அதில் இருந்து எப்படி சேமிப்பது அல்லது அந்த பணத்தை வைத்து அதில் இருந்து ஒரு வருமானத்தை எப்படி எடுப்பது என்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

எந்த ஒரு ஆன்மீகவாதியும் இதுபோல் சொல்லமாட்டார்கள். நான் சொல்லுவேன். ஏன் என்றால் உங்களின் நிலையில் இருந்து நான் யோசிப்பதால் நான் அப்படி சிந்திக்கிறேன். ஆன்மீகவாதிகளாக இருக்கும் அனைவரும் தங்களின் வருமானத்தை பெருக்கும் வழியில் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் மட்டும் ஏன் தேவையில்லாமல் செலவு செய்து உங்களின் பணத்தை விரையம் செய்கிறீர்கள்.

இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் பணம் தேவை என்பது உலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து உண்மை. நீங்களும் பணத்தைப்பற்றி கொஞ்சம் சிந்தித்தால் போதும். உங்களின் வாழ்க்கை மேம்படும்.

என்னை சந்திக்கும் அனைத்து இளைஞர்களிடம் நான் சொல்லும் வார்த்தை உங்களின் மாதவருமானத்தை எப்படி பெருக்கிக்கொள்வது என்பதைப்பற்றி யோசியுங்கள் என்பேன். தேவையில்லாமல் செலவு செய்யாதீர்கள் என்பேன். உங்களின் புண்ணியத்தை பெருக்கிக்கொள்ள செலவு செய்யுங்கள் என்பேன்.

ஒவ்வொருவரும் கிடைக்கும் பணத்தை வைத்து எப்படி அதனை பெருக்கிக்கொள்ளலாம் என்பது மட்டும் சிந்தியுங்கள். இந்த காலத்தில் பணம் இல்லாமல் ஆன்மீகம் கூட கிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Porulilarku ivvulakam illai