Followers

Tuesday, April 29, 2014

செவ்வாய்க்கு பரிகாரம்


ணக்கம் ண்பர்களே!
                   நான் கேட்ட கேள்விக்கு இதுவரை எனக்கு ஆறு பேர்கள் மட்டும் பதிலை சொல்லியுள்ளனர். மற்றவர்கள் யாரும் இதுவரை சிந்திக்கவில்லை என்று நினைக்கிறேன். நன்றாக சிந்தித்துவிட்டு பதிலை சொல்லுங்கள்.

பூமிக்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் கிரகம் இருக்கின்ற ஒன்பது கிரகத்திலேயே அதி வேகமாக பலனை நமக்கு கொடுக்கும் கிரகமாகும். செவ்வாய் கிரகத்தை வைத்து மட்டுமே நாம் பல நல்ல பலனை பெறமுடியும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு கட்டுமனை வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டுமனையை வாங்கி அதில் புதிய வீடு ஒன்று கட்ட வேண்டும் என்றும் ஆசை இருக்கும். எவ்வளவோ கஷ்டப்பட்டு பார்த்தாலும் நம்மால் கட்டுமனை கிடைக்கமாட்டேன்கிறது. அதாவது வாங்கமுடியவில்லை என்று நினைப்பவர்களுக்கு ஒரு பரிகாரம்

ஒன்பது வாரம் செவ்வாய்கிழமை அன்று முருகனுக்கு விரதம் இருந்து கடைசி வாரத்தில் செவ்வாய் கிரகத்திற்க்கு ஒரு அபிஷேகம் செய்து வந்தால் உங்களுக்கு கட்டுமனை அமையும். ஒன்பது வாரம் விரதம் இருக்கும்பொழுது அந்த நாளில் கண்டிப்பாக முருகன் கோவில் சென்று தீபம் ஏற்றி அல்லது நவகிரகத்தில் உள்ள செவ்வாய்கிரகத்திற்க்கு தீபம் ஏற்றி வழிப்பட்டு வரவேண்டும். கடைசி நாள் அதாவது ஒன்பதாவது வாரத்தில் இறுதி நாளில் அபிஷேகம் செய்யவேண்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: