Followers

Thursday, April 10, 2014

உங்களின் ஜாதகம் உங்களை உயர்த்தும்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான கிரகநிலைகள் இருக்கின்றன அப்படி இருக்கும் கிரகநிலைக்கு நாம் செய்துக்கொடுக்கும் பூஜையில் மட்டுமே அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு செல்லமுடியும். அம்மனை வைத்து நான் எல்லாருக்கும் செய்துக்கொடுத்தாலும் ஜாதகத்தை எடுத்து அவர்களுக்கு வேலை செய்வதில்லை.

ஜாதகத்தை எடுத்து பிறருக்கு வேலை செய்வது கூட தெரியாத அளவுக்கு தான் வேலைகள் இருக்கும். அனைத்தும் தனிப்பட்ட முறையில் நானே செய்வது அது. என்ன ஒன்று என்றால் நமது நண்பர்கள் அனைவரும் அம்மனின் வேலை மட்டும் போதும் என்று நடந்துக்கொள்கிறார்கள்.

என்னோடு ஒரு நாள் சண்டைப்போட்டுக்கொண்டு சென்றால் அந்த நாளிலிருந்து அவர்களின் வீழ்ச்சி ஆரம்பிக்கும். அம்மன் அவர்களை விட்டு வந்தவுடன் அவர்கள் அவர்களாகவே விழ ஆரம்பித்துவிடுவார்கள். நான் பிறருக்கு செய்கிறேன் என்றால் அவ்வளவு பாதுகாப்போடு தான் நான் செய்வேன். கஷ்டப்பட்டு எடுத்ததை இவர்கள் ஏமாற்றிவிட்டு சென்றார்கள் என்றால் என்ன செய்வது அதனால் அப்படி செய்வேன்.

இதுவரை எத்தனையோ பேருக்கு நல்லது செய்து இருக்கிறேன் ஆனால் ஒருவரிடம் அவர்களின் ஜாதகத்தை வாங்கி செய்துக்கொடுத்தது கிடையாது என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஜாதகத்தை வாங்கி செய்தாலும் மறுபடியும் பழைய நிலைக்கு மாற்றமுடியும் என்ன என்றால் அதற்க்காக மறுபடியும் நேரத்தை ஏன் செலவு செய்வானே என்று இருந்துவிடுவது உண்டு.

எல்லாருக்கும் ஜாதகத்தை வைத்து செய்யவேண்டும் என்று தான் நினைக்கிறேன் ஆனால் குருவின் உபதேசம் இந்தந்த காலகட்டங்களில் இவர்களுக்கு செய்யவேண்டும் என்று விதி உள்ளது. அதனால் அப்படி செய்கிறேன்.

தொழில் செய்பவர்களுக்கு கூட நான் சொல்லுவது இது தான். ஒழுங்காக நடந்துக்கொள்ளுங்கள். உங்களை மிகப்பெரிய அளவில் உயர்த்துக்கிறேன் என்று சொல்லுவேன்.  

ஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஒரு மனிதனுக்கு செய்தோம் என்றால் அந்த ஊரில் அவன் தான் நம்பர் ஒன் என்ற இடத்திற்க்கு வருவான். என்ன செய்வது நமது நண்பர்கள் அனைவரும் பரந்த மனப்பான்மையோடு வரமாட்டேன்கிறார்கள். பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Parantha manappaanmai athikam yarukkum iruppathilai sir.ammanai vaithu neengal velai seyum podhu engalukku ethenum kattuppaatukal unda?