Followers

Friday, April 4, 2014

பொது தகவல்


ணக்கம் ண்பர்களே!
                    சோதிட வாடிக்கையாளருக்கு சோதிட பரிகாரத்தை சொன்னாலும் அதனை கடைபிடித்து வரும்பொழுது மட்டுமே அவர்கள் வெற்றி பெறமுடியும். நான் சோதிட வாடிக்கையாளருக்கு சொல்லும் பரிகாரம் அனைத்தும் அவர்களே செய்வது போல் தான் இருக்கும். தொழில் செய்வர்களுக்கு மட்டுமே நான் செய்துக்கொண்டு வருவதால் சோதிடம் பார்க்க வருபவர்களிடம் அவர்களுக்கு எப்படி பரிகாரம் செய்யவேண்டும் என்பதை சொல்லிக்கொடுத்து அனுப்பிவைக்கிறேன்.

நீங்களே பரிகாரம் செய்வது போல் தான் இருக்கும். அப்படி எளிமையாக இருந்தும் பல பேர் அவர்கள் சென்று செய்வது கிடையாது. அது அவர்களின் நேரமா என்று கூட தெரியவில்லை.

பதிவில் நான் கொடுக்கும் ஆன்மீக ஆலோசனைகளை ஒரு சிலர் சரியாக பயன்படுத்திக்கொண்டு வருகின்றனர்.நீங்கள் இப்படி செய்துக்கொண்டு வரும்பொழுது மட்டுமே அம்மன் உங்களுக்கு நல்லவழியே காட்டும். ஒரே நாளில் அம்மன் செய்துவிடும் என்று எதிர்பார்ப்பது தவறு. 

கொஞ்ச காலம் நீங்கள் ஆன்மீகப்பயிற்சி செய்துவரும்பொழுது உங்களுக்கு அம்மன் கண்டிப்பாக நல்லது செய்யும். நீங்கள் உங்களின் குலதெய்வத்திற்க்கும் பச்சை பரப்புதல் செய்து வரும்பொழுது உங்களின் குடும்பம் சிறக்கும். உங்களின் குலதெய்வம் கண்டிப்பாக உங்களை நாடி வரும். நமது அம்மன் கண்டிப்பாக அதற்கு உங்களுக்கு உதவும்.

ஒரு முறை நீங்கள் பச்சை பரப்புதல் செய்தாலே ஆபத்து காலத்தில் உங்கள் முன் வந்து நிற்க்கும். செய்து பாருங்கள். குறைந்த செலவில் உங்களுக்கு வரும் ஆபத்தை தவிர்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: