Followers

Monday, April 28, 2014

மறுபடியும் கேள்வி


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் ஒரு கேள்வி கேட்டு இருந்தேன். அதற்கு ஒரு சில நண்பர்கள் எனக்கு போன் செய்து விளக்கம் சொன்னார்கள். ஒரு சிலருக்கு டைப் செய்ய தெரியவில்லை அதனால் உங்களை போன் செய்து பதிலை சொல்லுகிறோம் என்று சொன்னார்கள். உங்களுக்கு டைப் செய்ய தெரியவில்லை என்றால் எனக்கு போன் செய்து சொல்லுங்கள். என்னை தொடர்புக்கொண்டு பேசிய அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆர்வம் எனக்கு நன்றாக புரிந்தது. 

நண்பர்களே உங்களுக்கு தெரிகிறதோ இல்லையோ தெரிந்த விசயத்தை பகிர்ந்துக்கொள்ளுங்கள். உங்களின் கருத்துக்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இந்த நேரத்தில் தேவைப்படுகிறது. ஒவ்வொருவரும் ஆர்வமாக என்னிடம் பேசியதற்க்கு மிகவும் நன்றி.

இந்தியாவில் ஏன் உலகத்தில் இப்படிப்பட்ட வழியில் ஒரு ஆன்மீகத்தை சொல்லமுடியும் என்பதை ஜாதககதம்பத்தில் சொல்லிருக்கிறேன். உலகத்தில் இல்லாமல் ஒரு புதிய விசயத்தை சொல்லிவிடமுடியாது. எனக்கு குரு தந்த அந்த புதிய விசயத்தை உங்களோடு வாழ்ந்து காட்டி இருக்கிறேன்.

ஆன்மீகம் என்றாலே இப்படி தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்களிடம் இப்படியும் ஆன்மீகம் இருக்கமுடியும் என்பதை காட்டியுள்ளேன். கண்டிப்பாக என்னுடைய கருத்துகளை மட்டும் இங்கு பகிர்ந்துக்கொள்ளவில்லை நமது முன்னோர்கள் சொன்ன விசயத்தை வைத்து இந்த காலத்திற்க்கு உகந்த முறையில் மாற்றி வாழ்ந்துக் காட்டியுள்ளேன். 

நீங்கள் ஆன்மீகத்தில் மிக சிறந்தவர்களாக இருக்கின்றீர்கள் என்பது எனக்கு தெரியும் அதனால் ஜாதககதம்பம் சொன்ன ஆன்மீகத்தை என்ன என்று சொல்லுகிறீர்கள் என்பதே எனது கேள்வி. உங்களை அடுத்த கட்டத்திற்க்கு அழைத்து செல்ல ஒரு கேள்வியை கேட்டுள்ளேன்.

டைம் எடுத்துக்கொண்டு பதில் சொல்லுங்கள். ஜாதககதம்பத்திற்க்கு வரும் அனைவரும் பதிலை சொல்லுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

1 comment:

nallur parames said...

Jadhaka kadhampam engalukku oru aanmeega valikaddi.thodarnthu en aadharavu ungalukku undu