Followers

Saturday, April 26, 2014

மறுபதிப்பு


வணக்கம் நண்பர்களே!
                    இன்றைய காலத்தில் மக்கள் ஆன்மீகம் என்றாலே அது பதிவுகளில் அல்லது புத்தகங்களில் படிப்பது மட்டுமே ஆன்மீகம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதனைப்பற்றி முன்னரே நான் சொல்லிருந்தாலும் உங்களின் நலனுக்காக இதனை மறுபதிப்பாக வெளியிடுகிறேன்.

கொஞ்சம் படித்துவிட்டு அதிகமாக பயிற்சியில் ஈடுபடவேண்டும் அப்பொழுது மட்டுமே நீங்கள் அது என்ன என்று உணரமுடியும். முழு நேரமும் படித்துக்கொண்டே இருந்தால் பயிற்சியில் ஈடுபடுவது எப்பொழுது? ஆன்மீகவாதிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். நான் கூட இப்படி தான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.

ஜாதககதம்பத்தை கூட கொஞ்ச நாள் படியுங்கள். அதன் பிறகு நீங்கள் பயிற்சியில் ஈடுபட சென்றுவிடுங்கள். தினமும் படித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை.மாற்றி மாற்றி ஒரே விசயத்தை தான் சொல்லிக்கொண்டு இருக்கபோகிறோம்.

அடுத்ததாக இதனை எல்லாம் உங்களின் கண்களுக்கு பட்டாலே போதும். நீங்கள் சரியான திசையில் தான் வந்துக்கொண்டு இருக்கின்றீர்கள் என்பது விளங்கிவிடும். பல ஜென்மங்களாக இதனை தான் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது ஆன்மீகபதிவுகளை படிக்கும்பொழுதே தெரிந்துவிடும்.

என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள். எப்படி சார் ஆத்மாவை உணர்வது அதனை எப்படி வெளியில் எடுப்பது என்று கேட்பார்கள். அதற்கு பயிற்சி என்பது உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களும் செய்கின்றதை பயிற்சி என்று சொல்லி உங்களை நான் ஏமாற்றவில்லை. ஆத்மா டிராவல் செய்வது இயற்கையிலேயே நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனை உணர்வதற்க்கு நீங்கள் செய்யவேண்டியது ஒன்று தான். என்னால் ஆத்மா டிராவல் செய்யமுடியும் என்று நினைத்தாலே போதும்.

இதனை நான் ஏன் இந்த இடத்தில் சொல்லுகிறேன் என்றால் அனைவரும் காலம் காலமாக செய்துக்கொண்டு இருக்கின்ற செயலை நீங்களும் செய்கின்றீர்கள் ஆனால் உணர்வதற்க்கு அதனை ஏற்றுக்கொள்வதற்க்கு உங்களின் மனம் தடைச்செய்கிறது. அதுபோல் நீங்கள் படித்துக்கொண்டே இருக்கவேண்டியதில்லை உங்களின் ஆத்மாவை வைத்து அனைத்தையும் சாதிக்கமுடியும் என்று நீங்கள் நம்பினால் போதும்.

ஊரில் உள்ள பதிவுகளை எல்லாம் படிக்காமல் உடனே சென்று என் ஆத்மாவால் அனைத்தையும் செய்யமுடியும் என்று உங்களின் பூஜையறையில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு என்ன நடக்கிறது என்று கவனித்து பாருங்கள். நான் சொல்லுவது உங்களுக்கு புரியும்.


ஊரில் உள்ள அத்தனை ஆன்மீகவாதிகளும் சுற்றி சுற்றி ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள். காதல் என்றால் ஒன்று தான் அதனை பல விதங்களில் சினிமா படங்களை பல காலமாக எடுத்துக்கொண்டே வருகிறார்கள். அதனை பார்த்துக்கொண்டே இருந்தால் என்ன நடக்கும் ஒன்றும் நடக்காது. காதலித்து பார்த்தால் தானே அது என்ன என்று தெரியும். அது போல் ஆன்மீகமும் அப்படி தான். 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு. 

2 comments:

Unknown said...

Excellent explations. Keep up the good work.

CS Karthic said...

நண்பரே! நீங்கள் ஆத்மாவை உண்ர்ந்தீர்களா???