Followers

Thursday, June 12, 2014

சக்தி பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    இந்த பதிவு உங்களுக்கு நிறைய சந்தேகங்களை கொடுக்கும் நீங்கள் ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் உங்களுக்கு இது உதவும். ஒரு சாதாரணமான நபர்களுக்கு நான் பயன்படுவதைவிட ஒரு ஆன்மீகவாதிக்கு தான் நான் அதிகமாக பயன்படுவேன்.

ஆன்மீகவாதியின் முதல் நோக்கமே ஒரு சக்தியை எடுப்பது மட்டுமே. தன்னை சக்தியுடையவர்களாக மாற்றிக்கொள்வது. தன்னை சக்தியுடையவர்களாக மாற்றினால் மட்டுமே அனைத்தும் சாத்தியமாகும். பல இடங்களுக்கு சென்று சக்தியை பெறுவதற்க்கு முயற்சி செய்வார்கள். அப்படி முயற்சி செய்து சக்தி எடுப்பார்கள். இதனை தேடித்தான் கோவிலுக்கும் நீங்கள் செல்லுகின்றீர்கள்.

பல பயிற்சி செய்து முதலில் சக்தியை கண்டுக்கொள்ளவேண்டும். சக்தியை கண்டுக்கொண்ட பிறகு அதனை எப்படி தன்வயப்படுத்துவதில் முயற்சி செய்யவேண்டும். அந்த சக்தியை பெற்றபிறகு அதனை பாதுகாக்கவேண்டும்.

சக்தியை எடுத்துவிட்டால் அதனை தக்கவைத்துக்கொள்வது என்பது மிககடினமான ஒரு வேலை. சக்தி உங்களிடம் வந்துவிட்டால் நீங்கள் ஆபத்தான இடத்தில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். உங்களை பாதுகாப்பது மிக கடினம் அதனை பாதுகாக்கவேண்டும்.

சக்தியை நீங்கள் எடுத்தவிதத்தை என்னிடம் சக்தி இருக்கின்றது என்பதைப்பற்றி வெளியில் ஒருபோதும் சொல்லிவிடகூடாது. நான் பலமுறை பதிவில் சொல்லி இருக்கிறேன். என்னிடம் சக்தி இருக்கிறது என்று சொல்லும்பொழுது எனது குருவிடம் இருந்து எனக்கு மிகப்பெரிய எதிர்ப்பு வந்தது காரணம் எனக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் நினைத்தது தான். என்னைப் பயன்படுத்தி தவறான வழியில் கொண்டு சென்றுவிடுவார்கள் என்று அவரின் எண்ணம் இருந்தது. 

முதலில் சக்தியை எடுத்தப்பொழுது அவர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தார். மிகவும் கஷ்டப்பட்டு என்னை பாதுகாத்தார் என்று தான் சொல்லவேண்டும். நீங்கள் சக்தி எடுத்தால் உங்களோடு இருப்பவர் கூட சக்தி உடையவர்களாக மாறிவிடுவார்கள்.

அந்த சக்தியோடு சென்று அவர்கள் நினைத்த காரியத்தை செய்துவிடுவார்கள். ஒருத்தர் சக்தியை எடுத்துவிட்டால் அவரோடு அடுத்தவர்களை பழககூட விடமாட்டார்கள். 

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: