Followers

Wednesday, June 18, 2014

ஜதி ஸ்மரன்


வணக்கம் நண்பர்களே!
                    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தன்னை பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான். ஏன் தன்னைப்பற்றி தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று நினைக்கிறான் என்றால் அவனுக்கு வரப்போகும் மரணம் அவனை சிந்திக்க வைக்கிறது. 

மரணத்தைப்பற்றி சிந்திக்காத ஆன்மீகம் ஒரு போதும் கரைசேராது என்று ஆன்மீகவாதிகள் சொல்லுவார்கள். மரணத்தை சிந்தித்தால் மட்டுமே அவனுக்கு கடவுளைப்பற்றி ஆராய தொடங்குவான். மக்கள் பிறரின் மரணத்தை பார்க்கிறார்களே தவிர தன் மரணத்தை அவர்கள் பார்த்ததில்லை. அதாவது தனக்கு மரணம் வராது என்று நினைக்கிறார்கள்.

ஒருவர்க்கு மரணம் வருவதைப்பற்றி ஒரு அச்சம் இருந்தால் அவர்கள் அதனைப்பற்றி அறியும் விசயம் அனைத்தும் புத்தக அறிவாகத்தான் இருக்கின்றதை தவிர தன் அனுபவமாக அது இருக்காது. எப்படி அது அனுபமாக இருக்கும் என்று கேட்க தோன்றும். ஒரு சில தியான அனுபவத்தில் அதனை பெறமுடியும்.

உங்களிடம் சொல்ல வந்த விசயத்திற்க்கு வருகிறேன். ஒருவர் ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்றால் முதலில் அவரை பயமுறுத்தும் விசயமாக இருக்கவேண்டியது அவரின் மரணம் மட்டுமே. மரணத்தை அறிய முற்படும்பொழுது அவனின் முற்பிறவியைப்பற்றி அறிய முற்படுவார்கள். முற்பிறவியைப்பற்றி தெரிந்தால் மட்டுமே அவன் யார் என்று தெரிய ஆரம்பிக்கும்.

நான் கூட நிறைய சோதிடப்பதிவுகள் இதனைப்பற்றி எழுதியுள்ளேன். சோதிடத்தில் இதனைப்பற்றி தெரிந்தாலும் யாரும் சொல்லுவதில்லை. தொழில் முறை சோதிடர்களுக்கு இதனைப்பற்றி சொல்ல நேரம் இருப்பதில்லை. நீங்களே சோதிடத்தை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

தியானம் கற்றுக்கொடுக்கும் சாமியார்கள் இதனைப்பற்றி எல்லாம் சொல்லி தருவதில்லை. இதனை எல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுத்தால் நீங்கள் அவரை விட்டு சென்றுவிடுவீர்கள் அல்லவா.

புத்தமதத்தில் ஒரு யுக்தியாக இதனை கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களிடம் சென்றால் நீங்களும் இதனைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். முன் ஜென்மத்தில் உங்களைப்பற்றி அறியும் யுக்தி்க்கு பெயர் தான் ஜதி ஸ்மரன்

நல்ல ஆன்மீகவாதியாக மாறவேண்டும் என்றால் இதில் எல்லாம் கவனம் செலுத்தி ஆராய்ந்து பார்க்கவேண்டும். நான் ஒரு சில காலத்தில் ஆன்மீகப்பயிற்சி கற்றுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்யும்பொழுது அதாவது மந்திரப்பயிற்சி என்று ஒருவரை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம் என்று எண்ணி அவருக்கு இந்த யுக்தியை பயன்படுத்தி அவருக்கு கொடுத்து பார்த்தேன். 

அவரின் முன்ஜென்மங்களைப்பற்றி எல்லாம் அவர் அறிந்தார். இப்பொழுது எல்லாம் ஆன்மீகப்பயிற்சி எல்லாம் எடுப்பது கிடையாது. அவரோடு முடிந்துவிட்டது. ஒவ்வொருவரும் ஆன்மீகத்திற்க்கு வருகிறேன் என்று வருகிறார்களே தவிர உண்மையான தேடுதல் கிடையாது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: