Followers

Sunday, June 29, 2014

சனிக்கு பரிகாரம்


வணக்கம் நண்பர்களே!
                    சனியின் பிடியில் இருப்பவர்களை ஆஞ்சநேயருக்கு வெண்ணை காப்பு செய்ய சொல்லிருந்தேன். சனிப்பெயர்ச்சியும் வரபோகின்றது. கோச்சாரப்படி பலன்களை முன்கூட்டியே கொடுக்கும் ஆற்றல் சனிபகவானுக்கும் உண்டு.

சனியின் பாதிப்பு நமக்கு வரும் என்று நினைப்பவர்கள் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு செய்துவிட்டு ஒன்பது வாரம் சனிபகவானுக்கு தீபம் ஏற்றினால் போதுமானது. அவர்கள் சனியின் பாதிப்பில் இருந்து ஒரளவு விடுபடலாம்.

வெண்ணைக்காப்பு மட்டும் ஆஞ்சநேயருக்கு செய்துவிட்டு சனிக்கு தீபம் ஏற்றாமல் அவர் அவர்களின் ராசி அதிபதிக்கும் தீபம் ஏற்றி வந்தாலும் அவர்களின் ராசி அதிபதி சனியின் பிடியில் இருந்து காப்பாற்றுவார்.

ஏன் ஆஞ்சநேயருக்கு வெண்ணைக்காப்பு ஏற்றச்சொல்லுகிறேன் என்றால் ஆஞ்சநேயர் சிவனின் அம்சம் என்று சொல்லுவார்கள். அதனால் அவரால் சனியின் கொடுரபிடியில் இருந்து நம்மை காப்பாற்றமுடியும்.

ஒரு சில ராசியினர் நேராக சனிக்கு தீபம் ஏற்றினால் அவர்களுக்கு பிரச்சனையை அதிகமாக கொடுத்துவிடுவார் என்பதால் ஆஞ்சநேயருக்கு செய்துவிட்டு சனிக்கு செய்ய சொல்லுவது வழக்கம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: