Followers

Sunday, June 15, 2014

விரைய தசா பகுதி 24


வணக்கம் நண்பர்களே!
                    வெளிநாட்டில் இருக்கும் ஒரு நண்பர் தொடர்புக்கொண்டு பேசினார். அவரின் பெண் நண்பருக்கு ஒரு பிரச்சினை என்று சொன்னார். அவரிடம் நான் என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் அந்த பெண்ணிற்க்கு அவரின் கணவரோடு இணைந்த வாழபிடிக்கவில்லை என்று சொன்னார். அதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன். நீ எப்படியாவது இருவரையும் பிரித்து கொடுத்துவிடு என்று சொன்னார்.

நான் அவரிடம் அப்படி என்ன தான் இருவருக்கும் பிரச்சினை என்று கேட்டேன். அந்த பெண்ணிற்க்கு தன் கணவரோடு இருப்பதற்க்கு பிடிக்கவில்லை என்று சொன்னார் நான் ஒழுங்கான காரணத்தை சொல்லு என்று கேட்டேன். அந்த பெண்ணிற்க்கு தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லை என்று சொன்னார்.

நான் இருவரையும் பிரிக்க முடியாது. அப்படி எல்லாம் செய்ய முடியாது. அவரின் ஜாதகத்தை கொடு என்று கேட்டேன். அவரின் ஜாதகத்தை எனக்கு அனுப்பினார். அந்த பெண்ணிற்க்கு விரையவீட்டில் ராகுவும் சுக்கிரனும் சேர்ந்து இருந்தது. 

உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதனை பரிகாரத்தில் சரிசெய்ய முடியாது என்று தெரிந்தது. அவரின் கணவருக்கு காமத்தில் அதிக ஈடுபாடு இருக்கிறது. இந்த பெண்ணிற்க்கு அதில் துளிகூட விருப்பம் இல்லை. இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.

விரையவீட்டில் சுக்கிரன் தசாவை நடத்திக்கொண்டு இருக்கிறது. சுக்கிரன் தசாவை நடத்துவதால் அதோடு சேர்ந்து ராகுவும் இருப்பதால் விரைய வீட்டில் இருந்து அவரின் உடல் உறுப்புக்கு தீங்கு செய்துவிட்டார். இந்த மாதிரி பிரச்சினைக்கு நம்மால் எந்த உதவியையும் செய்துவிடமுடியாது. வேண்டுதல் வைத்தால் அதுவாகவே நடந்தால் மட்டுமே உண்டு.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: