Followers

Sunday, June 29, 2014

விரைய தசா பகுதி 28


வணக்கம் நண்பர்களே!
                    தஞ்சாவூர் பகுதியில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு நபர் என்னிடம் சோதிடம் பார்த்தார். அவர் ஆட்களை வெளிநாட்டிற்க்கு அனுப்பும் வேலை செய்து வந்தார். தஞ்சாவூர் பகுதியில் வெளிநாட்டிற்க்கு அனுப்பும் ஏஜென்டுகள் அதிகம் பேர் இருப்பார்கள். அந்த பகுதியில் படித்தவர்கள் மற்றும் படிக்காதவர்கள் அதிகம் பேர் வெளிநாட்டிற்க்கு சென்று வேலை செய்வார்கள்.

என்னை சந்தித்த நபரும் ஒரு ஏஜென்ட் தொழில் செய்து வந்தார். அவர் என்னை சந்தித்த பொழுது அவருக்கு லக்கினாதிபதியான புதன் விரைய வீட்டில் இருந்து தசாவை நடத்தி வந்தது. புதன் என்றாலே ஏஜென்ட் தொழிலுக்கு காரகம் வகிப்பவர் அல்லவா. 

அவரிடம் உங்களின் தொழில் சிறிய காலத்தில் பிரச்சினையை சந்திக்கபோகிறது. கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சொன்னேன். புதனை சனி மற்றும் செவ்வாய் கிரகங்கள் பார்த்து இருந்தது. 

அவர் அதனை அந்தளவுக்கு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பணம் அவரின் கண்ணை கட்டியது என்று தான் சொல்லவேண்டும். ஒரு சோதிடர் இந்த வருடம் பலனை சொன்னார் என்றால் அந்த பலன் அடுத்த வருடத்தில் நடந்தால் மட்டுமே அவரின் உழைப்பு வெளியில் வரும். உடனே சோதிடர்களின் திறமை வெளிப்படாது. சொன்ன பலன் நடந்த பிறகு சோதிடரின் திறமை வெளிப்படும்.

வெளிநாட்டிற்க்கு ஆளை அனுப்புகிறேன் என்று பல பேர்களிடம் பணத்தை பெற்றுவிட்டு அந்த பணத்தை என்ன செய்தாரோ தெரியவில்லை பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். பணம் கொடுத்தவர்கள் சும்மா இருப்பார்களா இவரை தேடி வீட்டிற்க்கு வர ஆரம்பித்தவுடன் ஒரு சில நாட்களில் தலைமறைவாகிவிட்டார்.

பனிரெண்டாவது வீட்டில் ஒரு கிரகம் இருந்து அது பாதிக்கப்பட்டு தசா நடந்தால் அந்த நபரை தலைமறைவு வாழ்க்கை வாழ வைத்துவிடுவார். இவரும் பல நாட்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: