Followers

Saturday, June 14, 2014

பெண்களை ஏமாற்றிய ஆன்மீகம் பகுதி 1


வணக்கம் நண்பர்களே!
                    என்னை நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என்னை சந்தித்தார். அவர் நிறைய தியானங்கள் பழகியிருக்கிறார். நிறைய ஆன்மீகவாதிகளை சந்தித்து அவர்கள் சொன்ன வழிகளை எல்லாம் கடைபிடித்து வந்திருக்கிறார். அவர் என்னிடம் நான் என்ன சக்தியை பெற்றாலும் அது கொஞ்ச நாளில் வெளியேறிவிடுகிறது என்று சொன்னார். அதன் வழியாக ஒரு உண்மையை உங்களிடம் சொல்லபோகிறேன். 

பல காலங்களாக பெண்கள் ஆன்மீகத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே ஆனால் பல காலமாக அனைவரும் பெண்களை ஏமாற்றியே வந்திருக்கிறார்கள் என்று நான் சொல்லுகிறேன். அனைத்து மதத்திலும் பெண்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்பது நன்றாக புரியும் பொழுது எனக்கு கவலையாக தான் இருந்தது.

 நான் சொன்ன என்ன ஏற்றுக்கொள்ளவா போகின்றார்கள். உங்களிடம் சொல்லுகிறேன் ஏற்றுக்கொண்டாலும் சரி ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சரி. என்றாவது ஒரு நல்ல ஆன்மீகவாதியாக நீங்கள் மாறும்பொழுது எனது நினைப்பு உங்களுக்கு கண்டிப்பாக வரும். 

ஒரு குரு தன்னுடைய சீடருக்கு தீட்சை கொடுக்கவேண்டும் என்றால் அவர்கள் முதலில் சீடனுடைய சூட்சம சரீரம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பார்கள். அந்த சூட்சம சரீரம் நன்றாக இருந்தால் மட்டுமே அவனுக்கு தீட்சை அளிப்பார்கள். அப்படி சூட்சம சரீரம் சரியில்லை என்றால் அதுவரை காத்துக்கொண்டு இருப்பார்கள். அந்த பிறவியில் அது நடக்கலாம் அல்லது அடுத்தபிறவியில் அவனுடைய சூட்சம சரீரம் நன்றாக மாறலாம். சூட்ச சரீரத்தில் அவன் தயாராகிவிட்டால் அவனுக்கு தீட்சைக்கொடுப்பார்.

இதனை அறிவதற்க்கு குரு தன்னுடைய மூன்றாவது கண் வழியாக காணுவார். மூன்றாவது கண்ணின் வழியாக தான் சூட்சமசரீரத்தை காணமுடியும். பல ஆன்மீகவாதிகள் இன்றைக்கு மூன்றாவது வழி கண் வழியாக நான் பார்ப்பேன் என்று உங்களிடம் சொல்லுவது எல்லாம் புத்தகத்தில் எழுதிய விசயங்களை படித்துவிட்டு சொல்லுகிறார்கள். உண்மையில் பலருக்கு இதில் ஞானம் கிடையாது.

ஒரு பெண்ணிற்க்கு மாதவிடாய் காலத்தில் இந்த சூட்சமசரீரம் மாறிவிடும். சூட்சம சரீரம் மாறுகின்றது என்றால் அவர்களால் மோட்சத்தை அடையமுடியாது. அவளின் சக்தி எல்லாம் வெளியேறிவிடும். அவளின் சக்தி கீழ்நோக்கி பாயும்பொழுது எந்த சக்தியும் அவளிடம் இருக்காது. பெண்ணிற்க்கு எந்த ஒரு குருவும் தீட்சை அளிக்கமுடியாது. 

உண்மையான சாமியார்களாக இருந்தால் கூட பெண்களை தள்ளிவைத்தால் அவர்கள் சமஉரிமை இல்லை என்று சண்டைக்கு வந்துவிடுவார்கள் என்று எண்ணி உங்களுக்கு தீட்சை தருகிறேன் என்று சொல்லுவார்கள். உண்மையில் ஒரு பெண்ணால் மோட்சம் என்பது அடையவே முடியாது. 

உலகத்தில் எத்தனையோ மதங்களில் உள்ள சாமியார்கள் பெண்களை தன் சீடர்களாக வைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு ஆன்மீகத்தை கற்றுக்கொடுத்துக்கொண்டு இருப்பார்கள். உண்மையை சொல்ல போனால் பெண்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது ஆன்மீகம்.

பல பெண்கள் மோட்சம் அடையவேண்டும் என்று சாமியார்களிடம் சென்று யோகா, தியானம் எல்லாம் கற்பார்கள். ஒரு குரு எப்படி சூட்சமசரீரத்தை பார்க்காமல் இவர்களுக்கு தீட்சைக்கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வரும் பெண்களை சேர்த்துக்கொண்டு ஏதாவது ஒன்றை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்.

ஒரு ஆண் தன்னுடைய விந்துவை கட்டுபடுத்திவிடலாம் ஆனால் ஒரு பெண்ணால் தன்னுடைய மாதவிடாயை கட்டுபடுத்தமுடியாது. கட்டுபடுத்தினால் அவளுக்கு நோய் வந்துவிடும். சூட்சமசரீரம் மாறக்கூடிய பெண்ணிற்க்கு ஒருவர் தீட்சை தருகிறேன் என்று சொன்னால் அந்த குரு ஒரு பொய்யர் என்பது நன்றாக தெரிந்துவிடும்.

பல்வேறு காலங்களாக ஆன்மீகம் இருந்துக்கொண்டு இருக்கிறது. பல்வேறு  ஆண்கள் மகான்கள் இருப்பார்கள். பெண்களாக இருப்பது வெகு குறைவு. இதுவரை யாருமே இதனைப்பற்றி யோசிக்கவில்லையா?

அடுத்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: