Followers

Thursday, June 5, 2014

தோஷம் இல்லாமல் குழந்தை பிறக்க


வணக்கம் நண்பர்களே!
                    வெளியூர் சென்று இருந்தப்பொழுது எனது தொழில் நண்பர்கள் சந்தித்தபொழுது அவர்கள் என்னிடம் இவ்வளவு தாேஷங்கள் நிறைந்து குழந்தைகள் பிறப்பதற்க்கு என்ன காரணம் என்று கேட்டார்கள். அவர்களிடம் என்ன காரணம் என்று சொல்லிவிட்டேன். அதனை உங்களிடம் சொல்லவேண்டும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன். இதில் எனது நண்பர்களின் கருத்தும் இருக்கிறது.

நாம் என்ன தான் திருமணத்தை நாட்களை பார்த்து செய்தாலும் முதலிரவில் நம்ம ஆட்கள் கோட்டையை விட்டுவிடுவார்கள் என்பது நன்றாக தெரியும். பொதுவாக முதலிரவுக்கு நல்ல நேரம் பார்த்து செய்கின்ற ஒரே மதம் நம்ம மதத்தில் மட்டுமே இருக்கும் என்று நினைக்கிறேன். அனைத்து விசயத்திற்க்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது.

சோதிடர்கள் தான் முதல் காரணமாக இருக்கமுடியும். இவர்கள் குறித்துக்கொடுக்கும் நேரம் அப்படிப்பட்டது. இவர்கள் குறித்து கொடுக்கும் நேரம் மிக மிக கெடுதல் உள்ள நேரமாக இருக்கும். அந்த நேரத்தில் கெட்ட ஆத்மாக்கள் உலாவும் நேரமாக இருக்கும். அதிக உச்சமான கெட்ட நேரமாக அந்த நேரம் இருப்பதால் இருவரும் இணையும்பொழுது பிறக்கும் குழந்தை தோஷம் உடையதாக மாறிவிடுகிறது. 

குழந்தை பிறந்து அதே சோதிடர்களிடம் சென்று குழந்தையின் ஜாதகத்தை குறிப்பு பார்த்தால் அந்த சோதிடர் சொல்லுவார் சூரியன் மறைந்துவிட்டது தந்தைக்கு கண்டம் என்று சொல்லிவிடுவார். அட நீ தான்ய நல்ல நேரம் பார்த்து கொடுத்தாய் இப்பொழுது தந்தைக்கு கண்டம் என்கிறாய் என்று சோதிடர்களிடம் கேட்டால் தயாராக வைத்திருக்கும் பதிலை கொடுத்துவிடுவார்கள்.

குழந்தை வேண்டும் என்றால் முதலில் தம்பதிகள் நல்ல நேரம் பார்த்து உறவுக்கொள்ள வேண்டும். பிரம்மமுகூர்த்த நேரம் மட்டுமே நல்ல நேரம். விடியற்காலையில் 4 மணி முதல் காலை 6 மணிக்குள் உடல் உறவு வைத்தால் அந்த குழந்தை நன்றாக இருக்கும். விடியற்காலையில் எழுந்து குளித்துவிட்டு உறவு வைத்துக்கொள்ளுங்கள். இப்படி ஏகாப்பட்ட டிப்ஸ் ஆன்மீகத்தில் இருக்கிறது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: