Followers

Saturday, June 14, 2014

பெண்களை ஏமாற்றிய ஆன்மீகம் பகுதி 2


வணக்கம் நண்பர்களே!
                    சக்தியை வெளியிடாமல் இருக்கும்பொழுது மட்டுமே மனிதனால் மோட்சத்தை அடையமுடியும். பெண்களுக்கு இயற்கையாகவே நடைபெறும் இந்த விசயத்தால் அவர்களின் சக்தி வெளியேறுவது மட்டும் இல்லாமல் அவர்களின் சூட்சசரீரத்தை மாற்றிவிடுகிறது. சூட்சசரீரம் தயாராகிவிட்டால் மட்டுமே ஒரு குரு சிஷ்யர்களுக்கு தீட்சை கொடுப்பார்கள்.

சூட்சமசரீரம் ஒவ்வொருவரின் உண்மையான அடையாளத்தை காட்டிக்கொடுத்துவிடும். ஒருவர் நன்றாக மூன்றாவது கண்ணை பயன்படுத்துகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரிடம் சென்று நீங்கள் பொய் பேசினால் அவர் நீங்கள் பொய் சொல்லுகிறீர்கள் என்று தெரிந்துவிடும். சூட்சமசரத்திற்க்கு ஒவ்வாத செயலை அந்த மனிதன் செய்கிறான் என்று சூட்சமசரீரம் காட்டும். 

நான் சொல்லுகிற இந்த சாதாரண விசயம் மிகப்பெரிய தாக்கத்தை படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும். ஏன் என்றால் பெண்களை தள்ளிவைத்தால் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்றே ஒவ்வொரு மதமும் ஆன்மீகத்திற்க்கு பெண்களை வைத்து இருக்கிறார்கள்.

புத்தர் பெண்களுக்கு தீட்சை கொடுக்கமாட்டேன் என்று சொன்னார். அவரை அடிபணியவைத்து தீட்சை கொடுக்க வைத்தார்கள். அவர் பெண்களுக்கு தீட்சை கொடுக்கும்பொழுதே சொன்னார் இந்த மதம் விரைவில் அழிந்துவிடும் என்று சொன்னார். அவர் சொன்னதன் அர்த்தம் பெண்களின் சூட்சசரீரம் மோட்சத்திற்க்கு தயாராக இருக்காது.

மகாவீரர்களிடம் கூட பெண்களுக்கு தீட்சை கொடுங்கள் என்று கேட்டார்கள். அவர் நான் வேண்டுமானால் பெண்களை அடுத்த பிறவியில் ஆண்களாக பிறக்க சக்தியை தருகிறேன் என்று சொன்னார்.

பல சாமியார்கள் மற்றும் மதங்கள் எதற்க்காக பெண்களை வைத்து ஏமாற்றுகிறார்கள் என்பது உங்களுக்கே புரியும். பெண்களிடம் உண்மையை சொல்லாமல் அவர்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

என்னிடம் வந்த பெண் ஒரு உண்மையான ஆன்மீகத்தோடு என்னை சந்தித்து பேசினார். அவருக்கு தேவையான சக்தியை அம்மனிடம் இருந்து பெறுகிறார் ஆனாலும் அவரால் அந்த சக்தியை நிலைநிறுத்த முடியவில்லை.

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களிலும் உள்ள பெண்களாக இருந்தாலும் அவர்களால் ஒருபோதும் மோட்சத்தை அடையமுடியாது. அந்த மார்க்கத்தில் வழியாக கண்டிப்பாக மோட்சத்தை அடையமுடியாது.

பெண்களாக இந்த பிறவியில் இருக்கும்போதே அவர்கள் மோட்சம் அடையமுடியாத என்று கேட்கலாம்.

அடுத்த பதிவில் பார்க்கலாம்...

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

2 comments:

nallur parames said...

Neenga vampula mattikkadhinga.penkal porkodi thookka poranga.

Swami said...

அம்மனை அனுப்பி பிரச்னை தீர்க்கும் அற்புத கடவுளே, பெண்ணால் ஆன்மீகவாதியாகவே மாற முடியாத போது, கடவுளாக எப்படி மாற முடியும்?? மாதவிடாய் இயற்கை. அதிலிருந்து பிறந்த நீங்கள் மஹான் ஆகும்போது , உங்களை உற்பத்தி செய்கின்ற அவளால் மஹாசக்தி ஆக முடியாதா?