Followers

Friday, June 6, 2014

பொது தகவல்கள்


வணக்கம் நண்பர்களே!
                    இந்த வருடத்தில் ஜாதககதம்பத்தில் அதிகமாக படிக்கப்பட்ட பதிவு ஆண்கள் மட்டும் படிக்கவும் என்ற பதிவு. என்னபா நடக்கிறது இங்கே. செல்வம் வர என்ன செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன் அதனை எல்லாம் அந்தளவுக்கு யாரும் விரும்பவில்லை.

ஆண்கள் மட்டும் படிக்கவும் என்று சொன்னதை பெண்களும் படித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். உங்களிடம் தலைப்பில் ஆண்கள் மட்டும் படிக்கவேண்டும் என்று போட்டிருக்கிறேன். நீங்களும் படித்து இருக்கிறீர்கள். எல்லா நண்பர்களும் மீண்டும் மீண்டும் படித்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நான் ஒரு மருத்துவர் போல் தான் உங்களுக்கு நல்ல விசயங்களை சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். 

மந்திரப்பயிற்சி என்றவுடனே நமது நண்பர்கள் நிறைய பேர் வருகிறார்கள். அனைத்தும் நீங்களே செய்துக்கொள்ளமுடியும். நிறைய புத்தகங்கள் இருக்கின்றன அதனை எல்லாம் வாங்கி படித்து யோகா மற்றும் தியானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும். ஏன் செய்ய மாட்டேன்கிறார்கள் என்றால் ஆசிரியர்களிடம் கற்ற பழக்கவழக்கம் இவர்களை இப்படி மாற்றுகிறது.

தனியாக படிக்கவேண்டும் என்றால் இவர்களின் மனநிலை அதற்க்கு தயாராகவில்லை. பள்ளிக்கூடத்தில் படித்த மனநிலை இவர்களை பின் தொடர்கிறது. அந்த காரணத்தால் தனியாக படிக்க விரும்புவது இல்லை. எதுவும் நம்மிடம் வசதி இல்லை என்று நினைத்துக்கொண்டு நீங்களாகவே கற்றுக்கொள்ளுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Ithukku naan comment podaleengko.