Followers

Sunday, June 1, 2014

போலி சித்தர்கள்


வணக்கம் நண்பர்களே!
                    சித்தர்களைப்பற்றி எழுதி நீண்ட நாட்களாகிவிட்டது. சித்தர்களைப்பற்றி ஒரு சில விசங்களை பார்க்கலாம். சித்தர்கள் தங்களுடைய பணியை நிறைவேற்றிக்கொள்ள மீண்டும் மீண்டும் பிறப்பு எடுப்பார்கள் என்பது பல புத்தங்களில் நீங்கள் படித்திருப்பீர்கள். 

இந்த விசயத்தை இன்று பல இடங்களில் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் வேதனையான ஒரு விசயம். நம்ம ஆளுங்க தான் எதிலும் ஒரு பித்தலாட்டம் செய்வனே சித்தர்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. எங்காவது ஒரு இடத்தில் உட்கார்ந்துக்கொண்டு குறிச்சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருப்பது. குறி சொன்னாலும் பரவாயில்லை. அவனின் வயிற்றுபிழைப்புக்கு செய்கிறான் என்று விட்டுவிடலாம்.

இவர்கள் குறி சொல்லும்பொழுது எனது ஆத்மாவில் இப்பொழுது அகத்தியர் வந்திருக்கிறார். நான் அகத்தியர் பேசுகிறேன் என்று சொல்லுவது. பாவம் அகத்தியர் இவர்களின் கையில் மாட்டிக்கொண்டு என்ன பாடு பாடுகிறார்.போகர் வந்து விட்டு இப்பொழுது தான் செல்லுகிறார் என்று சொல்லுவது இப்படி இவர்களிடம் மாட்டாத சித்தர்களே கிடையாது.

எத்தனையோ மகான்கள் சித்தர்கள் இந்த பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள் அவர்கள் ஒருபொழுதும் தன் பேருக்காக எதனையும் செய்ததில்லை அவர்கள் உண்டு அவர்களின் வேலை உண்டு என்று சென்று இருக்கின்றனர்.

நம்ம ஆளுங்க அடிக்கிற கூத்துக்கு ஒரு அளவே இல்லை. இதனை எல்லாம் நம்பி நீங்கள் செல்லாதீர்கள். சித்தர்கள் ஒரு நாளும் தன்னை காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

சித்தர்கள் மீண்டும் பிறப்பு எடுப்பது உண்மையான ஒரு விசயம் தான் ஆனால் அவர்கள் தங்களை ஒரு பொழுதும் காட்டிக்கொண்டது கிடையாது. அப்பேர்பட்டவர்கள் மக்கள் கொடுக்கும் நூறுக்கும் ஐம்பதுக்கும் ஒரு நாளும் குறிச்சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: