Followers

Saturday, June 14, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                    புதன் என்கிற நரி என்ற பதிவை படித்துவிட்டு பல மிதுனராசி நண்பர்கள் மற்றும் கன்னி ராசி நண்பர்கள் என்னிடம் போன் செய்து நாங்கள் நரி வேலை எல்லாம் செய்யமாட்டோம் என்று சொன்னார்கள்.

மனிதன் என்று இருந்தால் இரண்டு பக்கமும் இருக்கதான் செய்யும். மனிதன் என்றால் ஒரே மாதிரி தான் இருப்பான் என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருந்தால் அதனை நான் நம்பமாட்டேன். தவறு செய்வது இயற்கையான ஒரு குணம் தான். 

பதிவில் எழுதும்பொழுது யாரையும் குறிப்பிட்டு சொல்லுவதில்லை. பொதுவான முறையில் எழுதுவது அதனை படித்துவிட்டு நீங்கள் வருத்தப்படதேவையில்லை. ஒவ்வொரு ராசியிலும் நல்ல குணமும் உண்டு தீயகுணமும் உண்டு. இதனை எல்லாம் நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

புதனுக்கு பல நண்பர்கள் பரிகாரத்தை கேட்டார்கள். பொதுவாக நான் சொல்லும் பரிகாரங்கள் நான் கண்டுபிடித்தால் அதனை பதிவில் சொல்லிவிடுவேன். குரு வழியாக பரிகாரங்களை கொடுத்தால் அதனை நான் பதிவில் சொல்லுவது கிடையாது. எந்த விசயத்தையும் வெளியில் விடுவதற்க்கு அவர்கள் அனுமதி கொடுப்பதில்லை. அவர்களின் பேச்சை மீறி நான் எதுவும் செய்யமுடியாது. 

அனைத்து சோதிடர்கள் போல் நானும் தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள் என்று சொல்லுவது உண்டு.நம்பிக்கையுடன் நவகிரகத்தில் இருக்கும் புதனுக்கு நீங்கள் தீபம் ஏற்றி வழிப்பட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: