Followers

Sunday, June 1, 2014

இனிய தொடக்கம்


வணக்கம் நண்பர்களே!
                    மாதத்தில் முதல் நாள் இனிய தாெடக்கமாக சக்தியைப்பற்றி ஆரம்பிக்கலாம். சக்தியைப்பற்றி சொன்னேன். முதலில் எனக்கு தெரிந்த ஒரு யுக்தியை சொல்லிவிடுகிறேன். நான் இதனை முதலில் பயின்றது வெளியில் இல்லை நானே இதனை பயின்றேன் என்று தான் சொல்லவேண்டும்.

அனைத்துமே கவனித்தல் மட்டுமே. தியானத்தில் மிக உயர்ந்த நிலை என்று சொல்லப்படுவதும் முதலில் நீங்கள் செய்வதும் கவனித்தல் மட்டுமே. உங்களுக்குள் நடைபெறுவதை நீங்கள் வெளி ஆட்கள் போல் கவனித்தால் என்ன நடைபெறுகிறது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

உங்களை நன்றாக உற்று கவனிக்கவேண்டும். நீங்கள் செய்வது எல்லாம் வெளி ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்பதிலேயே உங்களின் கவனம் செல்லுகிறது. பக்கத்துவீட்டுக்காரன் கார் வாங்கி வாங்கியிருக்கிறான் அதைப்போல் நாமும் கார் வாங்கவேண்டும். பக்கத்துவீட்டில் உள்ள பெண் நல்ல புடவை வாங்கியுள்ளார் அதனைப்பாேல் நானும் வாங்கவேண்டும் என்பதிலேயே கவனம் செல்லும் அதனை எல்லாம் நன்றாக கவனிக்க தெரிந்த நமக்கு நமக்குள் என்ன நடக்கிறது என்பதை மட்டும் பார்ப்பதே கிடையாது.

நமக்கு பசி வருகிறது அந்த பசி எதனால் வருகிறது என்று ஒரு நாள் பார்த்தால் உங்களை ஆராய ஆரம்பித்துவிடுவீர்கள். உங்களுக்கு கோபம் வருகிறது என்றால் அந்த கோபம் எதனால் வருகிறது அது எங்கு இருந்து வருகிறது என்று கொஞ்சம் கவனித்து பார்த்தால் போதும் உங்களுக்குள் நடக்கும் விந்தை உலகத்தை காண ஆரம்பித்துவிடலாம்.

ஒரு ஆன்மீகவாதி முதலில் செய்ய வேண்டிய விசயத்தை சொல்லிவிட்டேன். உடனே செயலில் இறங்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: