Followers

Tuesday, June 10, 2014

பங்கு வர்த்தகம்


வணக்கம் நண்பர்களே!
                     ஷேர் மார்க்கெட் செய்பவர்கள் இத்தனை பேர் இருப்பது எனக்கே வியப்பாக இருக்கின்றது. அனைவரும் குறைந்தளவு முதலீடு செய்து செய்துக்கொண்டு இருக்கின்றனர். குறைந்தளவு முதலீடு செய்பவர்கள் என்னை தொடர்புக்கொண்டு எங்களுக்கும் அம்மனை வைத்து செய்து தாருங்கள் என்று கேட்கின்றனர். 

அனைவருக்கும் செய்துக்கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொருவருக்கும் செய்துக்கொடுக்கும்பொழுது எனது எனர்ஜி செலவாகும். நீங்கள் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து இதில் கலந்துக்கொண்டு செய்யும்பொழுது உங்களுக்கும் நல்ல லாபம் வரும் எனக்கும் லாபம் வரும். 

பெரிய அளவில் செய்யும்பொழுது என்ன சக்தி செலவாகின்றதோ அதே சக்தி தான் சிறிய அளவில் செய்யும்பொழுதும் செலவாகும்.எனக்கு சக்தி செலவாகும் பொழுது பெரிய அளவில் பணம் வரும்பொழுது நான் திருப்தி அடைவேன். சிறிய அளவில் செய்யும்பொழுது எனக்கு பணம் குறைவாக வரும் அதற்கு ஏன் சக்தியை செலவு செய்யவேண்டும் என்று நினைப்பதால் பெரிய அளவில் பணத்தை போட்டு செய்துக்கொள்ளுங்கள்.

ஷேர் மார்க்கெட் செய்பவர்களுக்கு இதுவரை என்னோடு தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மட்டும் செய்துக்கொண்டு இருக்கிறேன். இனிமேல் புதிய நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். வருபவர்கள் கண்டிப்பாக நீங்கள் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்துவிட்டு என்னிடம் வாருங்கள்.

பொதுவாக இந்த வியாபாரம் கொஞ்சம் பிரச்சினை உள்ள வியாபாரம் அதாவது கொஞ்சம் அசந்தால் கூட நஷ்டத்தை தழுவவேண்டி வரும். உங்களின் ஜாதகத்தை வைத்து இதனை செய்ய இருப்பதால் உங்களின் ஜாதகம் இருந்தால் மிக நல்லது.

உண்மையும் சொல்லவேண்டுமானால் நீங்கள் ஷேர்மார்க்கெட்டை பற்றி நன்றாக தெரிந்துக்கொண்டு அதன் பிறகு வியாபாரம் செய்ய வாருங்கள். என்னிடம் இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் நன்றாக ஷேர்மார்க்கெட்டிங் பற்றி தெரிந்தவர்கள். அவர்கள் என் உதவியை எதிர்பார்த்தது நஷ்டம் ஏற்படகூடாது அதனை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டார்கள்.

அதிர்ஷ்டத்தை உருவாக்குவது மற்றும் நஷ்டம் ஏற்படாமல் இருப்பது மட்டுமே எனது வேலை. சின்ன சின்ன நஷ்டம் வருவது இயற்கை. பெரிய நஷ்டம் ஏற்பட்டு பணம் முழுவதும் செல்லாமல் பார்த்துக்கொள்வது எனது வேலை.

பொதுவாக மனிதன் மனதால் நடப்பவன் தன் மனதை நம்பும்பொழுது அது சந்தேகப்படுவது இயற்கை. மனதை மீறி யார் என்னை நம்புகிறார்களோ கண்டிப்பாக மூன்றே மாதத்தில் கோடிஸ்வரனாக மாறிவிடுவார்கள். 

என்னிடம் ஒரு நல்ல விசயம் என்ன என்றால் நான் உங்களை கோடிஸ்வரனாக மாற்றிவிட்டால் அந்த நேரத்தில் இனிமேல் நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்றால் தாராளமாக என்னை விட்டு செல்ல அனுமதிப்பேன். நான் எந்தவிதத்திலும் உங்களை என் அடிமைப்போல் வைத்திருக்க மாட்டேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: