Followers

Saturday, June 14, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!

Nallur Parames

Neenga vampula mattikkadhinga.penkal porkodi thookka poranga.

வணக்கம் நண்பரே போர்க்கொடி தூக்கினால் தூக்கட்டும் உண்மையை சொல்லவேண்டியது எனது கடமை. பல்லாண்டுகளாக பெண்களை ஏமாற்றி வருகிறார்கள். அவர்களிடம் உண்மையை சொல்லிவிட்டால் அவர்களுக்கான வழியையும் நான் சொல்லிவிட்டால் அதனை அவர்கள் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள் அல்லவா.

உண்மையை சொல்லும்பொழுது அவர்கள் தன்னுள் எல்லாம் கேள்வியையும் கேட்டுவிட்டு அதன் பிறகு அதனை பின்பற்ற தொடங்குவார்கள். உண்மையை மறைக்க எனக்கு விரும்பம் இல்லை. பொதுவாக சாமியார்கள் மதத்தை பின்பற்றுபவர்கள் அனைவரும் தனக்கு நிறைய சீடர்கள் வேண்டும் என்று பெண்களை தவறான வழிக்கு அழைத்துச்செல்வார்கள்.

எல்லா விசயங்களையும் தெரிந்த சாமியார்கள் ஏன் பெண்களிடம் உங்களால் இதில் ஈடுபடமுடியாது. உங்களான பாதை இதுவல்ல என்று சொல்லுவதில்லை. பெண்களை அழைத்துக்கொண்டு யோகா, தியானம் என்று சொல்லிக்கொண்டு உங்களை சக்தி வாய்ந்தவராக மாற்றுகிறேன் என்று சொல்லுகிறார்கள். எந்த பெண் மிகப்பெரிய சக்திவாய்ந்த பெண்ணாக இருக்கிறாள்? ஏதாவது ஒரு சில பெண்களை தவிர யாரும் கிடையாது. அந்த சக்தி வாய்ந்த பெண்ணும் நான் சொல்லபோகிற வழியில் பின்பற்றுகிற பெண்ணாக இருப்பாள்.

ஒவ்வொரு ஆன்மீக இடத்திலும் பெண் இருந்தால் தான் ஆண் அங்கு வருவான் என்ற கீழ்தரமான எண்ணங்களால் அப்படி செய்கிறார்கள். 

நண்பரே எனக்கு கூட்டம் தேவையில்லை ஆனால் நான் சொல்லுகின்ற கருத்தை சொல்லிக்கொண்டே இருப்பேன். அனைத்து கருத்தும் எனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுத்து சொல்லுகிறேன். எனது அனுபவத்தில் எது நடந்தாலும் அதனை எழுதுவேன். எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தாலும் நான் சொல்லிக்கொண்டே இருப்பேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

nallur parames said...

Purikiradhu sir.nanri.