Followers

Tuesday, June 3, 2014

மந்திரங்கள் செய்யும் மாற்றம்


வணக்கம் நண்பர்களே!
                    தினமும் ஏதாே ஒரு மந்திரத்தை ஜெபித்து வருபவர்களுக்கு தன்னுடைய உடலை தன் கட்டுபாட்டில் வைத்துக்கொள்ளும் திறமை வந்துவிடும். அது இயற்கையாகவே அமையும்.

நான் முதலில் மந்திரப்பயிற்சி மட்டும் தான் செய்து வந்தேன். மந்திரப்பயிற்சியால் உடல் என்னுடைய விருப்பதிற்க்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளும் வித்தை தெரியவந்தது. அதற்கு காரணம் மந்திரப்பயிற்சியின் பலன். அதற்கு பிறகு அதிகமான உடற்பயிற்சியை நானே செய்தேன்.

இதயத்தை கூட உங்களின் சொல் பேச்சை கேட்டு நடப்பது போல் செய்யலாம். மூச்சுப்பயிற்சியை நீங்கள் வகுப்பிற்க்கு சென்று கற்றுக்கொள்வீர்கள். அவர்கள் வலதுபுறம் வரும் மூச்சு காற்றை இடதுபுறம் மாற்றுவது இடதுபுறம் வரும் மூச்சுக்காற்றை வலதுபுறமாக மாற்றுவது என்று சொல்லிக்கொடுப்பார்கள். நீங்கள் மந்திரப்பயிற்சி செய்தால் நீங்கள் மனதால் சொன்னாலே அதுவாகவே மாறும். 

நீங்கள் சும்மா படிக்கும்பொழுது இது எல்லாம் பெரிய விசயமா என்று தோன்றும். நீங்கள் சும்மா நினைத்தால் உங்களால் மூச்சை மாற்றமுடியாது. நீங்கள் பயிற்சி செய்தால் மட்டுமே இதனை எல்லாம் செய்யமுடியும். காயத்ரி மந்திரப்பயிற்சி செய்பவர்களுக்கு எல்லாம் நான் சொல்லுவது எதுவும் நடைபெறவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் மந்திரத்தை மட்டும் விட்டுவிடாதே தொடர்ந்து செய் என்பேன்.

மந்திரங்கள் உங்களின் உடலில் ஏறுவதற்க்கு சில காலம் பிடிக்கும். அது ஒரு வருடமாக இருக்கலாம் அல்லது இரண்டு வருடங்களாக இருக்கலாம் ஆனால் நீங்கள் அதனை தொடர்ந்து செய்துக்கொண்டே வரவேண்டும். மூச்சை நிறுத்தகூட செய்யலாம். ஏன் உடலில் உள்ள அனைத்து உறுப்பையும் தன் கட்டுபாட்டுக்கள் கொண்டுவரமுடியும்.

நீங்கள் உடலறவு கொள்ளும் நேரத்தில் உங்களின் விந்துவை வெளியில் விடவேண்டாம் என்று நினைத்து நீங்கள் உறவுக்கொண்டால் வெளியில் வராது. நீங்கள் நினைத்தால் மட்டுமே விந்து வெளியேறும். அந்தளவுக்கு சக்தி வாய்ந்தது மந்திரப்பயிற்சி. என்ன ஒன்று என்றால் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

உங்களின் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து விசயத்தையும் ஆன்மீகம் கற்றுக்கொடுத்துவிடும். ஆன்மீகம் என்பதை நமது வாழ்க்கை சிறந்த முறையில் மாற்றிக்கொள்ள உதவும் ஒரு கருவி.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.    

1 comment:

nallur parames said...

Ivvalavu visayam sathikkalama.?