Followers

Wednesday, June 25, 2014

விரைய தசா பகுதி 27


வணக்கம் நண்பர்களே!
                    குருவும் சனியும் சேர்ந்து ஒருவருக்கு பனிரெண்டாவது வீட்டில் இருந்தது. அவருக்கு குரு தசா ஆரம்பித்து நடந்தது. பனிரெண்டாவது வீடு என்றால் நாம் விரையம் மட்டும் நடக்கும் என்று எதிர்பார்க்க தேவையில்லை. சுபநிகழ்ச்சிகள் நடப்பது கூட விரைய கணக்கில் தான் வரும்.

இவரின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். நல்ல வரனை பார்த்து அவர் திருமணத்தை நடத்தினார். அவர் திருமணத்தை நடத்துவதற்க்குள் நிறைய கஷ்டத்தை அடைந்தார். அதற்கு காரணம் குருவோடு சனியும் சேர்ந்து இருந்த காரணத்தால் அப்படி நடந்தது.

திருமணத்தில் ஏகாப்பட்ட தடங்கல்கள் ஏற்பட்டது. திருமண பேச்சை பேசும்பொழுது கூட அவர்கள் இந்த திருமணம் நடைபெறும் என்று அவர்களால் நிச்சயமாக சொல்லமுடியவில்லை அந்தளவுக்கு சனி முட்டுக்கட்டையை போட்டது.

சனி தடுக்க நினைக்கும்பொழுது அந்த காரியத்தை வெற்றி அடையவைப்பது கொஞ்சம் கடினம். ஏன் என்றால் நமது மனநிலையை போட்டு தாக்கிஎடுத்துவிடுவார் சனி பகவான். எப்படியோ குருவின் பலத்தால் அவரின் மகள் திருமணம் நடந்தது. 

திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்க்குள் பெண்ணின் தாத்தா இறந்துவிட்டார். அதுவும் அவருக்கு செலவை வைத்துவிட்டார் சனிபகவான். குருவும் சனியும் சேரந்து இருந்தால் ஒரு நல்லது நடந்தால் ஒரு கெடுதல் நடைபெறும். அது விரைய வீட்டிற்க்கும் பொருந்தும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: