Followers

Tuesday, June 17, 2014

பங்கு வர்த்தகம்


வணக்கம் நண்பர்களே!
                    காலையில் இருந்து வேலை இருந்ததால் உங்களுக்கு பதிவு தரமுடியவில்லை. இப்பொழுது வந்தவுடன் பதிவை தருகிறேன். 

பல பேர்கள் பங்கு வணிகத்தில் ஈடுபடுகின்றனர். பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவர்கள் நிறைய டெக்னிக்கல் படித்துவிட்டு இதில் ஈடுபட்டுவருகின்றனர். எப்படி அவர்கள் படித்தாலும் மார்க்கெட்டில் தோல்வியை தழுவுகின்றனர்.

பங்குவர்த்தகத்தில் ஈடுபடுவர்களுக்கு அதிலும் நம்ம பதிவில் உள்ளவர்களுக்கு சோதிடம் என்பது நன்றாக தெரியும். கிரகங்கள் உங்களை கட்டுபடுத்தும்பொழுது அதனை மீறி உங்களால் வெற்றிகரமாக வர்த்தகத்தில் ஈடுபடமுடியாது.

முதலில் உங்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை ஆராய்ந்து அந்த கிரங்களுக்கு எல்லாம் தகுந்த பரிகாரம் செய்துவிட்டு பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள். 

பொதுவாக பரிகாரம் செய்தாலும் அந்த பரிகாரத்தில் அந்த கிரகங்கள் நன்றாக வேலை செய்கிறதா என்று பார்த்துக்கொண்டு அதில் ஈடுபடுங்கள். ஏன் என்றால் கண் அசந்தால் பணம் முழுவதும் போய்விடுகின்ற தொழில் இது. பரிகாரம் வேலை செய்தவுடன் வர்த்தகத்தில் ஈடுபடவேண்டும்.

பங்கு வர்த்தகத்தில் எனது வாடிக்கையாளருக்கு செய்துக்கொடுத்த விசயங்கள் கூட ஒரு சில பிரச்சினை வருகிறது. அம்மனை வைத்து சரிசெய்துக்கொண்டே இருக்கிறேன். மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டு செய்யும் செயல் இது மட்டுமே.  நீங்களும் நல்ல பரிகாரம் செய்துவிட்டு வர்த்தகத்தில் ஈடுபடுங்கள்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

Priya.P said...

Hello Brother, What is the full reason for the failure..?in paper trading judgement is correct. but on real trading it makes lost. Which one can earn money from share market.. I review most persons trade accounts they earn but they lost.. they are addicted to that Please review and make post about the trading logic.. I hope it is useful for novel traders...