Followers

Sunday, June 1, 2014

விரைய தசா பகுதி 18


வணக்கம் நண்பர்களே!
                    சனிக்கிரகம் ஒருவருக்கு பனிரெண்டில் இருந்து அவருக்கு விரைய தசா நடந்தால் அவரின் ஆயுளுக்கு உத்திரவாதம் இல்லை என்றாலும் ஒரு சில விசயங்களை சனிக்கிரகம் செய்யும். அது என்ன என்று பார்க்கலாம்.

ஒருத்தர் வேலையில் இருந்து அவர்க்கு விரைய தசாவாக சனிக்கிரகம் நடத்தினால் அவருக்கு வேலையில் பிரச்சினைகள் வந்துவிடும். வேலையில் உள்ளவர்களுக்கு அந்த வேலையை நிரந்தரமாக இருக்கவைக்கமாட்டார்.

தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் மிகப்பெரிய அளவில் சரிவை சந்திக்கவேண்டும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பை கொடுக்கமாட்டார்கள். கட்சி கொடி தூக்கிக்கொண்டு உங்களுக்கு எதிராக போராடிக்கொண்டு இருப்பார்கள்.

சனியின் விரைய தசாவில் பொதுவாக புத்தி ஒழுங்காக வேலை செய்யாது. மந்தப்புத்தி அதிகமாக இருக்கும். இந்த காரணத்தாலேயே அதிகம் கோட்டையை விட்டவர்கள் உண்டு.

உடல் உபாதை செய்யும். உடலில் தேவையில்லாத விசயங்கள் தேங்கிவிடும். உடல் நஞ்சுபோல் மாறிவிடும். ஒவ்வாமை வந்து தொந்தரவு செய்யும்.பல பேர்களை நான் இப்படி பார்த்து இருக்கிறேன். உடம்பு அதிகமாக வலிக்கிறது என்பார்கள். ஏதாவது உடலில் செய்துக்கொண்டே இருக்கிறது. என்னால் ஒழுங்காக வேலை செய்யமுடியவில்லை என்பார்கள் அதற்கு எல்லாம் சனிக்கிரகம் பனிரெண்டில் இருந்து தசா நடந்துவதால் மட்டுமே இப்படி நடக்கும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: