Followers

Sunday, June 1, 2014

தசாநாதன்


வணக்கம் நண்பர்களே!
                    ஒவ்வொருவரின் வாழ்வையும் அதாவது இந்தந்த வயதில் இப்படி நடக்கவேண்டும் என்று பொதுவாக மக்கள் ஒரு நியதி வைத்து வாழ்ந்துக்கொண்டிருப்பார்கள். பள்ளி முடித்த பிறகு கல்லூரி அதன் பிறகு வேலை என்று நியதி வைத்து வாழ்வார்கள்.

மக்கள் அனைவருக்கும் இது பொதுவான ஒரு நியதி இந்தந்த வயதில் இப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் இதனை எல்லாம் மக்கள் தன்னுடைய மனதிற்க்காக வைத்துக்கொண்டாலும் ஒவ்வொருத்தரையும் ஆட்டிபடைப்பது அவர்களின் தசா மட்டுமே. ஒவ்வொருவரின் வாழ்வையும் மாற்றி வைப்பது அவர்களின் ஜாதகத்தில் நடைபெறும் தசா மட்டுமே.

ஒவ்வொருவரின் வாழ்வில் மாற்றத்தை தருவதில் அதிகப்பங்கு பெறுவது தசாநாதன் தான். அனைவருக்கும் தநாநாதன் வேலை செய்யும் ஆனால் நல்லதை தருகிறதா அல்லது தீயதை தருகிறதா என்பதில் தான் வித்தியாசப்படும்.

நன்றாக படித்துக்கொண்டிருப்பான் ஒரு பையன் திடீர் என்று தன் படிப்பை விட்டுவிட்டு வேறு ஒன்றில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடுவான்.அவனின் மாற்றத்திற்க்கு அவனோடு சேர்ந்த நண்பர்கள் தான் காரணம் என்று நாம் சொல்லிக்கொண்டு இருப்போம். அவனின் மாற்றத்திற்க்கு தசாநாதன் அப்படிப்பட்ட நண்பர்களை அனுப்பிருக்கிறான் என்பது நமக்கு சோதிடர்களிடம் சென்ற பிறகு தான் தெரியவரும்.

நன்றாக இருக்கும் மனிதன் சாவுவதற்க்கும் காரணம் தசாநாதன் மட்டுமே. உங்களின் தசாநாதன் என்ன செய்துக்கொண்டு இருக்கிறான் என்பதை உங்களின் ஜாதகத்தை எடுத்து பார்த்து தெரிந்துக்கொள்வது நல்லது.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: