Followers

Saturday, June 7, 2014

விரைய தசா பகுதி 21


வணக்கம் நண்பர்களே!
                    விரைய தசாவை பார்த்துக்கொண்டு வருகிறோம். பனிரெண்டாவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனியும் சேர்ந்து இருந்தது. அவருக்கு செவ்வாய் தசா தொடங்கியது. அவர் சொந்தமாக கம்பெனி நடத்தி வந்தார். 

லேத் ஒர்க் செய்து வந்தார். அந்த கம்பெனி வழியாக மட்டுமே அவருக்கு வருமானம் வந்துக்கொண்டிருந்தது. செவ்வாய் மற்றும் சனி என்றாலே கனரக தொழிலை காட்டும் கிரகங்கள். இந்த இரண்டு கிரகங்களும் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து இருந்தது. இவர் செய்து வந்த தொழிலும் இதே தொழில்.

இவரின் கம்பெனியில் வேலை பார்க்கும் தொழிளார்கள் வெளியில் இருந்து பொருட்களை திருடி வந்து இவரின் கம்பெனியில் தயார் செய்து வந்து இருக்கிறார்கள். இவர்க்கு தெரியாமல் செய்து வந்து இருக்கிறார்கள். கம்பெனிக்கு இவர் வந்துவிட்டு உடனே வெளியில் சென்றுவிடுவார் அந்த நேரத்தை நன்றாக பயன்படுத்திக்கொண்டு இவர்கள் வேலையை காட்டி உள்ளார்கள்.

இவரின் கம்பெனிக்கு அருகில் இருக்கும் கம்பெனியில் இருந்து கொண்டு வந்து செய்துள்ளனர். அந்த கம்பெனியின் முதலாளி இதனை கண்டிபிடித்து காவல்துறையில் புகார் செய்துவிட்டார். இவரின் தொழிலாளர்கள் செய்த தவறு இவரின் மேல் விழுந்துவிட்டது.

இவரின் பேரில் காவல் நிலையத்தில் புகார் செய்ததால் இவரின் மேல் குற்றம் விழுந்துவிட்டது. அதனை நிருபித்து வெளியில் வருவதற்க்குள் இவர் படாதப்பாடுப்பட்டுவிட்டார்.

சனி தொழிலாளர்களை குறிக்கும் கிரகம் அல்லவா. அதனால் இவரின் தொழிலாளர்கள் வழியாக இவருக்கு பிரச்சினை வந்துவிட்டது. செவ்வாய்க்கும் சனிக்கும் பகை என்பதால் சனி தொழிலார்கள் வழியே பிரச்சினை கொடுத்துவிட்டது. செவ்வாய் தசா தான் அவருக்கு நடந்தது ஆனால் செவ்வாயோடு சனி சேர்ந்து இருந்ததால் இவருக்கு இப்படிப்பட்ட பிரச்சினையை ஏற்படுத்திவிட்டது.


நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: