Followers

Sunday, June 29, 2014

நண்பரின் பிரிவு


வணக்கம் நண்பர்களே!
                    அம்மன் பூஜைக்கு சென்றதால் ஊரில் இருந்தேன். ஒரு வாரத்திற்க்கு ஊரில் வேலை இருந்தது. திடீர் என்று சென்னையில் ஒரு வேலைக்காக ஊரில் இருந்து சென்னைக்கு நேற்று வந்தேன். நேற்று மதியம் நேரத்தில் எனது நண்பர் ஒருவர் இறந்த செய்தி வந்தது. அவரின் வீட்டிற்க்கு சென்று எல்லா காரியத்தையும் செய்துவிட்டு நேற்று மாலையில் அடக்கம் செய்துவிட்டு வந்தேன்.

இதனை ஏன் உங்களிடம் சொல்லுகிறேன் என்றால் அந்த நண்பர் ஒரு முஸ்லீம். ஆரம்ப காலகட்டத்தில் ஜாதககதம்பம் எழுதுவதற்க்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர். அவர் தான் அடையாரில் ஒரு டிராவல்ஸ் நடத்தி வந்தார். அந்த டிராவல்ஸில் உள்ள சிஸ்டத்தில் இருந்து தான் அதிகமான பதிவுகள் ஜாதககதம்பத்தில் வந்தது.

நான் சோர்வாக இருந்த காலகட்டத்தில் மிகுந்த உற்சாகத்தை ஊட்டியவர். படிக்கிறார்கள் அல்லது படிக்காமல் போகிறார்கள் உனது வேலையை செய்துக்கொண்டி இரு என்று சொன்னவர். நல்ல மனிதர். ஒரு முஸ்லீமாக இருந்து இந்து மக்களுக்கு உதவதற்க்கு உதவியவர்.

அல்லா மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். என்னையும் புரிந்துக்கொண்டவர். நல்ல மனிதர் நேற்றோடு இந்த பூமியின் வாழ்வை முடித்துக்கொண்டு சென்றுவிட்டார். என்னை பொருத்தவரை எந்த மரணத்திற்க்கும் நான் வருத்தப்படாதவன். நேற்று மனது கொஞ்சம் கலங்கியது. 

அவர் என் பெயரை எந்த பதிவிலும் சொல்லிவிடாதே என்று சொன்னவர். அந்த காரணத்தால் அவரின் பெயரை நான் சொல்லவில்லை. ஜாதககதம்பம் வளர்வதற்க்கு மிகுந்த துணை புரிந்தவரின் ஆத்மா இறைவனிடம் சேரட்டும்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

1 comment:

கார்த்திக் சரவணன் said...

நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள் சார்... மிகவும் வருத்தமான செய்தி... அன்னாரது ஆத்மா சாந்தி அடையட்டும்...