Followers

Monday, June 23, 2014

விரைய தசா பகுதி 26


வணக்கம் நண்பர்களே!
                    அவர் ஒரு சிறிய அளவிலான கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். ஆறாவது வீட்டு அதிபதியான சனி பகவான் விரைய வீட்டில் அமர்ந்திருந்தார். அவருக்கு சனிபகவான் தசா நடக்க ஆரம்பித்தது. 

இவர் ஒரு சபலபுத்தி உடையவர். தன் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களையே தன் இச்சைக்கு பயன்படுத்த ஆரம்பித்தார். எப்பொழுது ஒரு முதலாளி தன் கம்பெனியில் இப்படிப்பட்ட வேலையில் இறங்கிறார்களே அப்பொழுது அந்த கம்பெனி சரிவை சந்திக்க ஆரம்பித்துவிடும்.   

வேலையாட்களுக்கு காரகம் வகிப்பவர் சனிபகவான். அவரே தொழிலுக்கும் காரகம் வகிப்பதால் வேலையாட்களை கை வைக்கும்பொழுது அந்த தொழில் அதுவாகவே கீழே விழ ஆரம்பித்துவிடும். 

பல இடங்களில் நீங்களே பார்த்து இருக்கலாம். முக்கால்வாசி கம்பெனிகளின் முதலாளிகள் கீழே விழுந்தற்க்கு காரணமாக இந்த விசயம் இருக்கும். வெளிநாட்டினரும் சபலத்தில் விழுவார்கள் ஆனால் அவர்கள் தொழிலில் வைத்துக்கொள்ள மாட்டார்கள். தொழில் வேறு சபலம் வேறு என்று வைத்துக்கொள்வார்கள். நம் ஆட்கள் சபலத்தை தொழிலில் வைத்துக்கொள்வார்கள் தொழில் கொஞ்ச நாளில் கீழே சென்றுவிடும்.

இவர் வேலையாட்களை தன் இச்சைக்கு பயன்படுத்தியதால் கொஞ்ச நாளில் கம்பெனியை இழந்தார். இப்பொழுது சும்மா இருக்கிறார். சனி பகவான் பனிரெண்டாவது வீட்டில் அமர்ந்து தொழிலை கீழே விழவைத்துவிட்டார்.

நான் தொழிலில் ஆன்மீக உதவி செய்பவர்களின் கம்பெனி முதலாளிகளில் ஒரு சிலர் இப்படி இருக்கின்றார்கள் நீங்களே பார்த்து உங்களை திருத்திக்கொண்டால் நல்லது. 

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: