Followers

Monday, June 23, 2014

அம்மனின் சக்தி


வணக்கம் நண்பர்களே!
                    நண்பர் கிருஷ்ணப்பசரவணன் அவர்கள் என்னிடம் சார் அனைவருக்கும் அம்மனின் சக்தியை வெளிப்படுத்திக்காட்டுங்கள் என்று கேட்டுருந்தார். அவர்களின் விருப்படி அனைவராலும் அம்மனின் சக்தியை உணரமுடியும் படி செய்து இருக்கிறேன்.

நீங்கள் ஆன்மீகத்தில் சிறிய காலம் பயிற்சி செய்தால் போதும் உங்களால் அம்மனின் சக்தியை உணரமுடியும். பலபேர்கள் எனக்கு எல்லாம் இது நடைபெறுமா என்று நினைத்த பொழுது கூட அவர்களுக்கு எல்லாம் அம்மன் தன் சக்தியை காட்டிக்கொடுத்துள்ளது.

நீங்கள் விரும்பினால் நல்ல பக்தியை செலுத்தினால் கண்டிப்பாக அம்மனின் சக்தியை நீங்கள் உணரமுடியும். இன்று முதல் அனைவருக்கும் இந்த நல்ல விசயங்கள் நடைபெறும். 

என்னைப்பொருத்தவரை ஜாதககதம்பத்தை படிப்பவர்கள் அனைவரும் உணரவேண்டும் என்று தான் நினைக்கிறேன். எனக்கு இருக்கின்ற பல சூழ்நிலைகளால் அதனை வெளியில் காட்டாமல் இருந்து வந்தேன். இன்று முதல் பார்க்கலாம் எத்தனை பேர் அதனை உணர தொடங்குகிறார்கள் என்று பார்க்கலாம்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் படாதப்பாடு பட்டு வெளியில் சென்று அலைந்து கடைசியில் உணரும் சக்தியை நீங்கள் இன்று முதல் எளிதில் உணர்வது போல் செய்து இருக்கிறேன்.

எது நடந்தாலும் அதாவது நல்ல விசயங்கள் நடைபெறும் பொழுது உண்மையாகவே நடக்கவேண்டும். சும்மாக எதனையும் தவறாக சொல்லாதீர்கள். உங்களின் அனுபவத்தை என்னிடம் மெயிலில் தெரிவியுங்கள்.

ஜாதககதம்பத்தை படிக்கும்பொழுது இனி தலைவலி உருவாகினால் அது அம்மனின் சக்தியின் வெளிப்பாடு அதன் பிறகு ஒவ்வொன்றாக உங்களுக்கு நடைபெறும். என்னிடம் பேசும்பொழுது எந்தளவுக்கு உங்களுக்கு சக்தி கிடைத்ததோ அதுப்பாேல் ஜாதககதம்பத்தை படிக்கும்பொழுது உங்களுக்கு கிடைக்கும்.

உங்களின் ஆத்மா இனி பல வேலைகளை செய்ய தயாராகும். இது நல்ல வாய்ப்பு எத்தனைபேர் உணர்கின்றார்கள் என்று பார்க்கலாம்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: