Followers

Thursday, June 19, 2014

கேள்வி & பதில்


வணக்கம் நண்பர்களே!
                   paari vendhan  வணக்கம் ,இதை சொல்வதற்கு மன்னிக்கவும் .நீங்கள் ஓரளவு ஆன்மிகம் தெரிந்து உள்ளீர்கள் ஆனால் உங்களுக்கு தெரியாத ஆன்மிகத்தை இல்லை என்று சொல்வதற்கில்லை.உங்களுக்கு காம இச்சை இருந்தால் முதலில் அதை தீர்த்துவிட்டு ..மக்களுக்கு போதனை செய்ய வாருங்கள்.பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபட முடியாது என்று பொய் சொல்லி ..தந்த்ரா மூலம் மட்டுமே மோட்சம் அடைய முடியும் என்று சொல்லி ..உங்கள் ஆசையை தீர்த்து கொள்ள எண்ணாதீர்.ஆன்மிகத்திற்கு ஆண் பெண் தடை இல்லை ..அனைவரும் தியானம் செய்து முக்தி அடைய முடியும்.அரைகுறையாக தெரிந்து கொண்டு...தயவு செய்து ..உங்கள் சுய தேவைக்கு ..ஆன்மிகம் என்ற பெயரில் பெண்களை ..அடைய எண்ணாதீர்கள்..அது கொடிய பாவம்...உங்களுக்கு இச்ஹை இருந்தால் திருமணம் செய்து கொள்ளுங்கள்...என் கருத்து உங்கள் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்...நன்றி


வணக்கம் நண்பரே ஜாதககதம்பம் வழியாக எந்த ஒரு ஆன்மீக வகுப்புகள் எடுப்பதில்லை என்பதை முதலில் உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். உங்களை சந்தித்தால் தானே உங்களை என் இச்சைக்கு பயன்படுத்திக்கொள்ளமுடியும். என்னை தேடி வராதீர்கள் என்று தான் எனது பதிவில் அதிகம் இருக்கும். 

தந்தரா என்றால் ஆணும் பெண்ணும் இணைந்து தியானம் செய்தால் தான் செய்ய முடியும் என்று எண்ணுவது உங்களின் அறியாமையை காட்டுகிறது. தந்தரா தனி நபரும் செய்துக்கொள்ளலாம். ஏன் நான் கூட தந்தரா பயிற்சி பெற்று இருக்கிறேன். நான் எந்த பெண்ணோடும் உடலறவு வைத்துக்கொண்டு அந்த பயிற்சியை பெறவில்லை. நானே தான் பயின்றேன். தந்தராவை உங்களுக்கு சொல்லிக்கொடுத்த குருவின் லட்சணம் அப்படி இருக்கலாம்.

தந்தராவை புதிய பரிமாணத்தில் எனது பதிவில் சொல்ல போகிறேன். அப்பொழுது நீங்கள் என்னை புரிந்துக்கொள்ளமுடியும். பெண்ணை அடைவதற்க்கு எப்பொழுதும் ஆன்மீகத்தை பயன்படுத்த தேவையில்லை. எனக்கு ஒரு பெண் பிடித்து இருந்தால் அவளிடம் நேரிடையாகவே கேட்டுவிட எனக்கு தைரியம் இருக்கிறது. ஒரு பெண்ணும் ஆணும் இணைவது தவறு என்று உங்கள் ஆன்மீகம் உங்களுக்கு சொல்லி தந்து இருக்கிறது. எனது ஆன்மீகம் அப்படி சொல்லாது.

தந்தரா என்பது உங்களின் உடலை பயன்படுத்தலாம் ஆனால் அதோடு அடைப்பட்டு இருக்க வைக்காது. பெண்ணிற்க்கு உடல் வழியாக தான் பிரச்சினை வருகிறது. அந்த உடலே வேண்டாம் என்று விட்டுவிட்டு வரும்பொழுது அந்த பெண் ஆணின் சக்திக்கு நிகராக இருக்கிறாள். 

மனது என்பது ஒரு வில்லங்கமான விசயம். அந்த மனதை தாண்டும்பொழுது மட்டுமே நமக்கு இறைவனின் சந்திப்பு கிடைக்க ஆரம்பிக்கிறது நண்பரே. மனதிற்க்கு தான் நீங்கள் மரியாதை எல்லாம் செய்யவேண்டும். மனது சல்லி அடைக்கும் பாரிவேந்தர் எனக்கு மரியாதை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கும். பாரிவேந்தர் எனக்கு அவமரியாதை செய்கிறார் என்று புலம்பும். மனதை கடந்துவிட்டால் பாரிவேந்தர் எனக்கு கோவில் கட்டினால் கூட அவரிடம் எந்த வித ஒட்டுதலும் உறவும் இருக்காது. மனதிலேயே நின்று இருப்பவனுக்கு மரியாதை அவமானம் பாதிக்கும். மனதை கடந்தவனுக்கு அனைத்தும் ஒன்று தான்.

நான் எதனையும் எதிர்பார்த்து செய்வதில்லை அனைத்தையும் சொல்லிவிடவேண்டும் என்று நினைக்கிறேன். ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவர்அவர்களின் இஷ்டம்.

பெண்களை அடைவது கொடிய பாவம் என்று சொல்லியே பெண்களை காலி செய்துவிட்டீர்கள். அப்படி ஒன்றும் பாவம் எல்லாம் இல்லை. ஆணாக இருந்தால் பெண்ணை தான் அடையமுடியும் இது பாவம் இல்லை. இது இயற்கை.

உலகத்தில் பெண் மோட்சத்தை அடையமுடியும் என்று சொல்லி சொல்லியே அவளை ஏமாற்றிவிட்டீர்கள். எந்த பெண் சக்தியோடு இருக்காள்? ஒரு பெண்ணை அவள் அனுமதி இல்லாமல் அவளை ஏமாற்றினால் தான் அது கொடிய பாவம். நீங்கள் அனைவரும் ஏன் இந்தியாவில் உள்ள அனைத்து சாமியார்களும் இப்படி ஏமாற்றியே அவளின் பாவத்தை சம்பாதித்துவிட்டீர்கள். 

எத்தனை ஆண் மகான்கள் இருக்கின்றார்கள். ஏதாவது ஒரு பெண் இருக்கிறாளா? உங்களால் அடையமுடியாது இது சரியான வழி இல்லை என்று சொல்லுவதற்க்கு உங்களிடம் தைரியம் இல்லை. எனக்கு தைரியம் இருக்கிறது நான் சொல்லுகிறேன்.

ஆண்களை விட பெண்களுக்கு தான் மோட்சத்தில் மேல் ஈடுபாடு இருக்கும். அதற்கு சரியான வழியை சொல்லி இருக்கிறீர்களா?. நான் சொல்லுகிற இந்த விசயம் பெண்களின் ஆத்மா கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் பெண்களுக்கு எதிராக கள்ளதனம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது கண்டிப்பாக பிரச்சினையை கிளப்புகிற விசயம்.

வேலை விசயமாக திருப்பூர் செல்லுகிறேன். இரண்டு நாட்கள் திருப்பூரில் இருப்பேன். எனக்கு நேரம் இருக்கும்பொழுது உங்களுக்கு பதிவை தருகிறேன்.

நன்றி நண்பர்களே !

அன்புடன்
ராஜேஷ்சுப்பு.

No comments: